ain1:

Oct. 12th, 2017 01:46 am
[personal profile] vasconica
1. வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்டோளே யாயே யாமே நனைய காஞ்சிச் சினைய சிறு மீன் யாணர் ஊரன் வாழ்க பாணனும் வாழ்க என வேட்டேமே. 2. வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வருக இரவலர் என வேட்டோளே யாயே யாமே பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண் துறை ஊரன் கேண்மை வழி வழிச் சிறக்க என வேட்டேமே. 3. வாழி ஆதன் வாழி அவினி பால் பல ஊறுக பகடு பல சிறக்க என வேட்டோளே யாயே யாமே வித்திய உழவர் நெல்லொடு பெயரும் பூக்கஞல் ஊரன் தன் மனை வாழ்க்கை பொலிக என வேட்டேமே. 4. வாழி ஆதன் வாழி அவினி பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக என வேட்டோளே யாயே யாமே பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் கழனி ஊரன் மார்பு பழனம் ஆகற்க என வேட்டேமே. 5. வாழி ஆதன் வாழி அவினி பசியில் ஆகுக பிணி சேண் நீங்குக என வேட்டோளே யாயே யாமே முதலை போத்து முழு மீன் ஆரும் தண் துறை ஊரன் தேர் எம் முன் கடை நிற்க என வேட்டேமே. 6. வாழி ஆதன் வாழி அவினி வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக என வேட்டோளே யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண் துறை ஊரன் வரைக எந்தையும் கொடுக்க என வேட்டேமே. 7. வாழி ஆதன் வாழி அவினி அறன் நனி சிறக்க அல்லது கெடுக என வேட்டோளே யாயே யாமே உளைப்பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும் தண் துறை ஊரன் தன்னூர்க் கொண்டனன் செல்க என வேட்டேமே. 8. வாழி ஆதன் வாழி அவினி அரசு முறை செய்க களவு இல் ஆகுக என வேட்டோளே யாயே யாமே அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் பூக் கஞல் ஊரன் சூள் இவண் வாய்ப்பதாக என வேட்டோமே. 9. வாழி ஆதன் வாழி அவினி நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக என வேட்டோளே யாயே யாமே கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் தண் துறை ஊரன் கேண்மை அம்பல் ஆகற்க என வேட்டேமே. 10. வாழி ஆதன் வாழி அவினி மாரி வாய்க்க வளம் நனி சிறக்க என வேட்டோளே யாயே யாமே பூத்த மாஅத்துப் புலால் அம் சிறுமீன் தண் துறை ஊரன் தன்னொடு கொண்டனன் செல்க என வேட்டேமே. 1. மனை நடு வயலை வேழம் சுற்றும் துறை கேழ் ஊரன் கொடுமை நாணி நல்லன் என்றும் யாமே அல்லன் என்னும் என் தட மென்தோளே. 2. கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் ஆற்றுக தில்ல யாமே தோற்க தில்ல என் தட மென் தோளே. 3. பரியுடை நன்மான் பொங்கு உளையன்ன வட கரை வேழம் வெண் பூப் பகரும் தண் துறை ஊரண் பெண்டிர் துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே. 4. கொடிப் பூ வேழம் தீண்டி அயல வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும் அணித்துறை ஊரன் மார்பே பனித் துயில் செய்யும் இன் சாயற்றே. 5. மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழைப் புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும் வேழ மூதூர் ஊரன் ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே. 6. ஓங்கு பூ வேழத்துத் தூம்பு உடைத் திரள் கால் சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் பூக்கஞல் ஊரனை யுள்ளிப் பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே. 7. புதர் மிசை நுடங்கும் வேழ வெண் பூ விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் புதுவோர் மேவலன் ஆகலின் வறிதாகின்று என் மடங்கெழு நெஞ்சே. 8. இருஞ்சாய் அன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி ஊரன் பொருந்தும் மலரன்ன என் கண் அழப் பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே. 9. எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெருஞ்சினை புணர்ந்தோர் மெய்ம் மணங் கமழும் தண் பொழில் வேழ வெண் பூ வெள்ளுகை சீக்கும் ஊரன் ஆகலின் கலங்கி மாரி மலரின் கண் பனி உகுமே. 20. அறுசில் கால அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் காம்பு கண்டன்ன தூம்பு உடை வேழத்துத் துறை நணி ஊரனை உள்ளியென் இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே. 1. முள்ளி நீடிய முது நீர் அடை கரைப் புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும் தண் துறை ஊரன் தெளிப்பவும் உண்கண் பசப்பது எவன் கொல் அன்னாய். 2. அள்ளல் ஆடிய புள்ளிக் களவன் முள்ளி வேர் அளைச் செல்லும் ஊரன் நல்ல சொல்லி மணந்து இனி நீயேன் என்றது எவன் கொல் அன்னாய். 3. முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டிப் பூக்குற்று எய்திய புனல் அணி ஊரன் தேற்றம் செய்து நம் புணர்ந்து இனித் தாக்கணங்கு ஆவது எவன் கொல் அன்னாய். 4. தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை தின்னும் முதலைத்து அவனூர் எய்தினன் ஆகின்று கொல்லோ மகிழ்நன் பொலந்தொடி தெளிர்ப்ப முயங்கியவர் நலங்கொண்டு துறப்பது எவன் கொல் அன்னாய். 5. புயல் புறந்தந்த புனிற்று வளர் பைங்காய் வயலைச் செங்கொடி களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்பு பலர்க்கு இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய். 6. கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் எம்மும் பிறரும் அறியான் இன்னன் ஆவது எவன் கொல் அன்னாய். 7. செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன் தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு எல் வளை நெகிழச் சாஅய் அல்லல் உழப்பது எவன் கொல் அன்னாய். 8. உண் துறை அணங்கிவள் உறை நோய் ஆயின் தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு ஒண் தொடி நெகிழச் சாஅய் மென் தோள் பசப்பது எவன் கொல் அன்னாய். 9. மாரி கடி கொளக் காவலர் கடுக வித்திய வெண் முளை களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்புற மரீஇத் திதலை அல்குல் நின் மகள் பசலை கொள்வது எவன் கொல் அன்னாய். 30. வேப்பு நனை அன்ன நெடுங்கண் களவன் தண் அக மண் அளை நிறைய நெல்லின் இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் பெருங் கவின் இழப்பது எவன் கொல் அன்னாய். 1. அம்ம வாழி தோழி மகிழ்நன் கடன் அன்று என்னும் கொல்லோ நம் ஊர் முட முதிர் மருதத்துப் பெருந்துறை உடனாடு ஆயமோடு உற்ற சூளே. 2. அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் அழுப என்ப அவன் பெண்டிர் தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே. 3. அம்ம வாழி தோழி மகிழ்நன் மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெருந்துறைப் பெண்டிரோடு ஆடும் என்ப தன் தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே. 4. அம்ம வாழி தோழி நம் ஊர்ப் பொய்கைப் பூத்த புழைக்கால் ஆம்பல் தாது ஏர் வண்ணம் கொண்டன ஏதிலாளற்குப் பசந்த என் கண்ணே. 5. அம்ம வாழி தோழி நம் ஊர்ப் பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் நிறத்தினும் நிழற்றுதல் மன்னே இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே. 6. அம்ம வாழி தோழி ஊரன் நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து உள்ளாது அமைதலும் அமைகுவம் மன்னே கயல் எனக் கருதிய உண்கண் பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே. 7. அம்ம வாழி தோழி மகிழ்நன் நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க வல்லன் வல்லன் பொய்த்தல் தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே. 8. அம்ம வாழி தோழி மகிழ்நன் தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் தண் தளிர் வெளவும் மேனி ஒண் தொடி முன் கை யாம் அழப் பிரிந்தே. 9. அம்ம வாழி தோழி ஊரன் வெம் முலை அடைய முயங்கி நம் வயின் திருந்திழைப் பணைத்தோள் ஞெகிழப் பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே. 40. அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒண் தொடி முன் கை யாம் அழப் பிரிந்து தன் பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப கெண்டை பாய்தர அவிழ்ந்த வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே. 1. தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு வெண் பூம் பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால் தன் சொல் உணர்ந்தோர் மேனி பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே. 2. மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள் கொல்லோ யாணர் ஊர நின் மாண் இழை அரிவை காவிரி மலிர் நிறை அன்ன நின் மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே. 3. அம்பணத்து அன்ன யாமை ஏறிச் செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் யாணர் ஊர நின்னினும் பாணன் பொய்யன் பல் சூளினனே. 4. தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆஅங்கு அதுவே ஐய நின் மார்பே அறிந்தனை ஒழுகுமதி அறனுமார் அதுவே. 5. கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் யாறு அணிந்தன்று நின் ஊரே பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே. 6. நினக்கே அன்று அஃது எமக்குமார் இனிதே நின் மார்பு நயந்த நன் நுதல் அரிவை வேண்டிய குறிப்பினை ஆகி ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே. 7. முள் எயிற்றுப் பாண் மகள் இன் கெடிறு சொரிந்த அகன் பெரு வட்டி நிறைய மனையோள் அரி கால் பெரும் பயறு நிறைக்கும் ஊர மாண் இழை ஆயம் அறியும் நின் பாணன் போலப் பல பொய்த்தல்லே. 8. வலை வல் பாண்மகன் வால் எயிற்று மடமகள் வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர வேண்டேம் பெரும நின் பரத்தை யாண்டுச் செய் குறியோடு ஈண்டு நீ வரலே. 9. அம் சில் ஓதி அசை நடைப் பாண் மகள் சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் யாணர் ஊர நின் பாண் மகன் யார் நலம் சிதயப் பொய்க்குமோ இனியே. 50. துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் வஞ்சி ஓங்கிய யாணர் ஊர தஞ்சம் அருளாய் நீயே நின் நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே. 1. நீர் உறை கோழி நீலச் சேவல் கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர புளிங்காய் வேட்கைத்து அன்று நின் மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே. 2. வயலைச் செங்கொடிப் பிணையல் தைஇச் செவ்விரல் சிவந்த சேய் அரி மழைக்கண் செவ்வாய்க் குறுமகள் இனைய எவ்வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே. 3. துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே சிறை அழி புதுப் புனல் பாய்ந்தெனக் கலங்கிக் கழனித் தாமரை மலரும் பழன ஊர நீ உற்ற சூளே. 4. திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ ஊரின் ஊரனை நீ தர வந்த பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு அஞ்சுவல் அம்ம அம்முறை வரினே. 5. கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் நல் அணி நயந்து நீ துறத்தலின் பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே. 6. பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா வெல் போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் நலம் பெறு சுடர் நுதல் தேம்ப எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே. 7. பகலின் தோன்றும் பல் கதிர்த் தீயின் ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன இவள் நலம் புலம்பப் பிரிய அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே. 8. விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் கைவண் விராஅன் இருப்பை அன்ன இவள் அணங்கு உற்றனை போறி பிறர்க்கும் அனையையால் வாழி நீயே. 9. கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்றுற மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர நினக்கு மருந்தாகிய யான் இனி இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே. 60. பழனக் கம்புள் பயிர்ப் பெடை அகவும் கழனி ஊர! நின் மொழிவல் என்றும் துஞ்சு மனை நெடு நகர் வருதி அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே. 1. நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம்பழம் நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம் கைவண் மத்தி கழாஅர் அன்ன நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே. 2. இந்திர விழவின் பூவின் அன்ன புந்தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ்வூர் மங்கையர்த் தொகுத்து இனி எவ்வூர் நின்றன்று மகிழ்ந நின் தேரே. 3. பொய்கைப் பள்ளிப் புலவு நாறு நீர் நாய் வாளை நாள் இரை பெறூஉம் ஊர எம் நலம் தொலைவது ஆயினும் துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே. 4. அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ நல மிகு புதுப் புனல் ஆடக் கண்டோர் ஒருவரும் இருவரும் அல்லர் பலரே தெய்ய எம் மறையாதீமே. 5. கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர புதல்வனை ஈன்ற எம் மேனி முயங்கன்மோ தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே. 6. உடலினென் அல்லேன் பொய்யாது உரைமோ யார் அவள் மகிழ்ந தானே தேரொடு தளர் நடைப் புதல்வனை உள்ளி நின் வள மனை வருதலும் வெளவியோளே. 7. மடவள் அம்ம நீ இனிக் கொண்டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெரு நலம் தருக்கும் என்ப விரி மலர்த் தாது உண் வண்டினும் பலரே ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோரே. 8. கன்னி விடியல் கணைக் கால் ஆம்பல் தாமரை போல மலரும் ஊர பேணாளோ நின் பெண்டே யான் தன் அடங்கவும் தான் அடங்கலளே. 9. கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே பலர் ஆடு பெருந்துறை மலரொடு வந்த தண் புனல் வண்டல் உய்த்தென உண்கண் சிவப்ப அழுது நின்றோளே. 70. பழனப் பன் மீன் அருந்த நாரை கழனி மருதின் சென்னிச் சேக்கும் மா நீர்ப் பொய்கை யாணர் ஊர தூயர் நறியர் நின் பெண்டிர் பேஎய் அனையம்யாம் சேய் பயந்தனமே. 1. சூது ஆர் குறுந்தொடிச் சூரமை நுடக்கத்து நின் வெங்காதலி தழீஇ நெருநை ஆடினை என்ப புனலே அலரே மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே. 2. வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத் திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் குவளை உண்கண் ஏஎர் மெல்லியல் மலர் ஆர் மலிர் நிறை வந்தெனப் புனலாடு புணர் துணை ஆயினள் எமக்கே. 3. வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை ஒண்ணுதல் அரிவை பண்ணை பாய்ந்தெனக் கள் நறுங் குவளை நாறித் தண்ணென்றிசினே பெருந்துறைப் புனலே. 4. விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே பசும் பொன் அவிர் இழை பைய நிழற்றக் கரை சேர் மருதம் ஏறிப் பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே. 5. பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் அலர் தொடங்கின்றால் ஊரே மலர தொன்னிலை மருதத்துப் பெருந்துறை நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே. 6. பஞ்சாய்க் கூந்தல் பசு மலர்ச் சுணங்கின் தண் புணல் ஆடித்தல் நலம் மேம்பட்டனள் ஒண் தொடி மடவரல் நின்னோடு அந்தர மகளிர்க்குத் தெய்வமும் போன்றே. 7. அம்ம வாழியோ மகிழ்ந நின் மொழி வல் பேரூர் அலர் எழ நீரலைக் கலங்கி நின்னொடு தண் புனல் ஆடுதும் எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையே. 8. கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த சிறை அழி புதுப் புனல் ஆடுகம் எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புனையே. 9. புதுப்புனல் ஆடி அமர்த்த கண்ணள் யார் மகள் இவளெனப் பற்றிய மகிழ்ந யார் மகள் ஆயினும் அறியாய் நீ யார் மகனை எம் பற்றியோயே. 80. புலக்குவம் அல்லேம் பொய்யாது உரைமோ நலத்தகு மகளிர்க்குத் தோள் துணை ஆகித் தலைப் பெயல் செம் புனல் ஆடித் தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே. 1. குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை அரிப் பறை வினைஞர் அல்கு மிசைக் கூட்டும் மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ என்னை நயந்தனென் என்ற நின் மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே. 2. வெகுண்டனள் என்ப பாண நின் தலைமகள் மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார்த் தாது உண் பறவை வந்து எம் போது ஆர் கூந்தல் இருந்தன எனவே. 3. மணந்தனை அருளாய் ஆயினும் பைபையத் தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் ஒண் தொடி முன் கை ஆயமும் தண் துறை ஊரன் பெண்டு எனப்படற்கே. 4. செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் கண்ணிற் காணின் எனாகுவள் கொல் நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண் கயம் போலப் பலர் படிந்து உண்ணு நின் பரத்தை மார்பே. 5. வெண் நுதல் கம்புள் அரிக்குரல் பேடை தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ சிறுவரின் இனைய செய்தி நகாரோ பெரும நின் கண்டிசினோரே. 6. வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல் நீள் வயல் நண்ணி இமிழும் ஊர எம் இவண் நல்குதல் அரிது நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே. 7. பகன்றைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் யாணர் ஊர நின் மனையோள் யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ? 8. வண் துறை நயவரும் வள மலர்ப் பொய்கைத் தண் துறை ஊரனை எவ்வை எம் வயின் வருதல் வேண்டுதும் என்ப ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே. 9. அம்ம வாழி பாண எவ்வைக்கு எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து வண்டு தாது ஊதும் ஊரன் பெண்டென விரும்பின்று அவள் தன் பண்பே. 90. மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன கொல் வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான் கொல் அன்னதாகலும் அறியாள் எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே. 1. நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து வெறி மலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகள் இவள் பழன வெதிரின் கொடிப் பிணையலளே. 2. கருங் கோட்டு எருமைச் செங்கண் புனிற்று ஆக் காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் நுந்தை நும் ஊர் வருதும் ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே. 3. எருமை நல் ஏற்று இனம் மேயல் அருந்தெனப் பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா செய்த இனைய மன்ற பல் பொழில் தாது உண் வெறுக்கைய ஆகி இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே. 4. மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை மகளிர் அன்ன துணையோடு வதியும் நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே கழனித் தாமரை மலரும் கவின் பெறு சுடர் நுதல் தந்தை ஊரே. 5. கருங்கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ நெடுங்கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் புனல் முற்று ஊரன் பகலும் படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே. 6. அணி நடை எருமை ஆடிய அள்ளல் மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் கழனி ஊரன் மகள் இவள் பழன ஊரன் பாயல் இன் துணையே. 7. பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டைக் கருந்தாள் எருமைக் கன்று வெரூஉம் பொய்கை ஊரன் மகள் இவள் பொய்கைப் பூவினும் நறுந் தண்ணியளே. 8. தண் புணல் ஆடும் தடங்கோட்டு எருமை திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர ஒண் தொடி மட மகள் இவளினும் நுந்தையும் யாயும் கடியரோ நின்னே. 9. பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை கழனி எருமை கதிரொடு மயக்கும் பூக் கஞல் ஊரன் மகள் இவள் நோய்க்கு மருந்தாகிய பணைத் தோளோளே. 100. புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் யாணர் ஊரன் மகள் இவள் பாணர் நரம்பினும் இன் கிளவியளே. *

Profile

vasconica

April 2020

S M T W T F S
   1 234
567891011
12131415161718
19202122232425
2627282930  

Most Popular Tags

Style Credit

Expand Cut Tags

No cut tags
Page generated Feb. 2nd, 2026 06:52 pm
Powered by Dreamwidth Studios