*
1. ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப்
பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார்
என்னும் பேர்கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு
இருந்தாள்.
2. சாராய் ஆபிராமை நோக்கி: நான் பிள்ளைபெறாதபடிக்குக்
கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப்
பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும்
என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம்
செவிகொடுத்தான்.
3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு,
ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான
தன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன்
புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக்
கொடுத்தாள்.
4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள்
தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை
அற்பமாக எண்ணினாள்
5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி: எனக்கு நேரிட்ட
அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை
உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான்
கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்;
கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக
என்றாள்.
6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி: இதோ, உன்
அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு
நலமானபடி அவளுக்குச் செய் என்றான்.
அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய்
நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்.
7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே
சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு:
8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து
வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள்: நான் என்
நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.
9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர்: நீ உன்
நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு
என்றார்.
10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: உன்
சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி,
எண்ணிமுடியாததாயிருக்கும் என்றார்.
11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி: நீ
கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்;
கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு
இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.
12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை
எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு
விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக்
குடியிருப்பான் என்றார்.
13. அப்பொழுது அவள்: என்னைக் காண்பவரை நானும்
இவ்விடத்தில் கண்டேன் அல்லவா என்று சொல்லி,
தன்னோடே பேசின கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கிற தேவன் என்று
பேரிட்டாள்.
14. ஆகையால், அந்தத் துரவு பெயர் லகாய்ரோயீ
என்னப்பட்டது; அது காதேசுக்கும் பாரேத்துக்கும் நடுவே இருக்கிறது.
15. ஆகார் ஆபிராமுக்கு ஒரு குமாரனைப் பெற்றாள்;
ஆபிராம் ஆகார் பெற்ற தன் குமாரனுக்கு இஸ்மவேல்
என்று பேரிட்டான்.
16. ஆகார் ஆபிராமுக்கு இஸ்மவேலைப் பெற்றபோது, ஆபிராம்
எண்பத்தாறு வயதாயிருந்தான்.
*
1. ஆபிராம் தொண்ணூற்றொன்பது
வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான்
சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக
நடந்துகொண்டு உத்தமனாயிரு.
2. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை
ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன்
என்றார்.
3. அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து
வணங்கினான். தேவன் அவனோடே பேசி:
4. நான் உன்னோடே பண்ணுகிற என் உடன்படிக்கை
என்னவென்றால், நீ திரளான ஜாதிகளுக்குத்
தகப்பனாவாய்.
5. இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத்
திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால்,
உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.
6. உன்னை மிகவும் அதிகமாய்ப் பலுகப்பண்ணி, உன்னிலே
ஜாதிகளை உண்டாக்குவேன்; உன்னிடத்திலிருந்து ராஜாக்கள்
தோன்றுவார்கள்.
7. உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நான்
தேவனாயிருக்கும்படி எனக்கும் உனக்கும், உனக்குப்பின் தலைமுறை
தலைமுறையாக வரும் உன் சந்ததிக்கும் நடுவே, என் உடன்படிக்கையை
நித்திய உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
8. நீ பரதேசியாய்த் தங்கிவருகிற கானான் தேசமுழுவதையும்,
உனக்கும் உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும் நித்திய
சுதந்தரமாகக் கொடுத்து, நான் அவர்களுக்குத்
தேவனாயிருப்பேன் என்றார்.
9. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: இப்பொழுது நீயும்,
உனக்குப் பின் தலைமுறை தலைமுறையாக வரும் உன் சந்ததியும், என்
உடன்படிக்கையைக் கைக்கொள்ளுங்கள்.
10. எனக்கும் உங்களுக்கும், உனக்குப் பின்வரும் உன் சந்ததிக்கும்
நடுவே உண்டாகிறதும், நீங்கள் கைக்கொள்ள
வேண்டியதுமான என் உடன்படிக்கை என்னவென்றால்,
உங்களுக்குள் பிறக்கும் சகல ஆண்பிள்ளைகளும்
விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்;
11. உங்கள் நுனித்தோலின் மாம்சத்தை
விருத்தசேதனம்பண்ணக்கடவீர்கள்; அது எனக்கும்
உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
12. உங்களில் தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும்
ஆண்பிள்ளைகளெல்லாம் எட்டாம் நாளிலே
விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்; வீட்டிலே பிறந்த பிள்ளையும் உன்
வித்தல்லாத அந்நியனிடத்தில் பணத்திற்குக்
கொள்ளப்பட்ட எந்தப் பிள்ளையும், அப்படியே
விருத்தசேதனம்பண்ணப்படவேண்டும்.
13. உன் வீட்டிலே பிறந்த பிள்ளையும், உன் பணத்திற்குக்
கொள்ளப்பட்டவனும்,
விருத்தசேதனம்பண்ணப்படவேண்டியது அவசியம்; இப்படி என்
உடன்படிக்கை உங்கள் மாம்சத்திலே நித்திய உடன்படிக்கையாக
இருக்கக்கடவது.
14. நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம்பண்ணப்படாதிருக்கிற
நுனித்தோலுள்ள ஆண்பிள்ளையிருந்தால், அந்த ஆத்துமா என்
உடன்படிக்கையை மீறினபடியால், தன் ஜனத்தில் இராதபடிக்கு
அறுப்புண்டுபோவான் என்றார்.
15. பின்னும் தேவன் ஆபிரகாமை நோக்கி: உன் மனைவி சாராயை இனி
சாராய் என்று அழையாதிருப்பாயாக; சாராள் என்பது
அவளுக்குப் பேராயிருக்கும்.
16. நான் அவளை ஆசீர்வதித்து, அவளாலே உனக்கு ஒரு
குமாரனையும் தருவேன்; அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும்,
அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை
ஆசீர்வதிப்பேன் என்றார்.
17. அப்பொழுது ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து நகைத்து:
நூறுவயதானவனுக்குப் பிள்ளை பிறக்குமோ? தொண்ணூறு
வயதான சாராள் பிள்ளை பெறுவாளோ? என்று தன்
இருதயத்திலே சொல்லிக்கொண்டு,
18. இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று
ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்பண்ணினான்.
19. அப்பொழுது தேவன்: உன் மனைவியாகிய சாராள்
நிச்சயமாய் உனக்கு ஒரு குமாரனைப் பெறுவாள், அவனுக்கு
ஈசாக்கு என்று பேரிடுவாயாக; என் உடன்படிக்கையை அவனுக்கும்
அவனுக்குப் பின்வரும் அவன் சந்ததிக்கும் நித்திய
உடன்படிக்கையாக ஸ்தாபிப்பேன்.
20. இஸ்மவேலுக்காகவும் நீ செய்த விண்ணப்பத்தைக் கேட்டேன்;
நான் அவனை ஆசீர்வதித்து, அவனை மிகவும் அதிகமாகப்
பலுகவும் பெருகவும் பண்ணுவேன்; அவன் பன்னிரண்டு
பிரபுக்களைப் பெறுவான்; அவனைப் பெரிய
ஜாதியாக்குவேன்.
21. வருகிற வருஷத்தில் குறித்தகாலத்திலே சாராள் உனக்குப்
பெறப்போகிற ஈசாக்கோடே நான் என் உடன்படிக்கையை
ஏற்படுத்துவேன் என்றார்.
22. தேவன் ஆபிரகாமோடே பேசி முடிந்த பின்பு, அவர் அவனைவிட்டு
எழுந்தருளினார்.
23. அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய
இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான்
பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள
ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச்
சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை
அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.
24. ஆபிரகாமுடைய நுனித்தோலின் மாம்சம்
விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன்
தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான்.
25. அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம்
விருத்தசேதனம்பண்ணப்படும்போது, அவன் பதின்மூன்று
வயதாயிருந்தான்.
26. ஒரேநாளில் ஆபிரகாமும் அவன் குமாரன் இஸ்மவேலும்
விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
27. வீட்டிலே பிறந்தவர்களும் அந்நியரிடத்திலே பணத்திற்குக்
கொள்ளப்பட்டவர்களுமாகிய அவன் வீட்டு மனுஷர்கள்
எல்லாரும் அவனோடேகூட விருத்தசேதனம்பண்ணப்பட்டார்கள்.
*
1. பின்பு, கர்த்தர் மம்ரேயின் சமபூமியிலே அவனுக்குத்
தரிசனமானார். அவன் பகலின் உஷ்ணவேளையில்
கூடாரவாசலிலே உட்கார்ந்திருந்து,
2. தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, மூன்று
புருஷர் அவனுக்கு எதிரே நின்றார்கள்; அவர்களைக் கண்டவுடனே,
அவன் கூடாரவாசலிலிருந்து அவர்களுக்கு எதிர்கொண்டு
ஓடித் தரை மட்டும் குனிந்து;
3. ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை
கிடைத்ததானால், நீர் உமது அடியேனைவிட்டுக் கடந்து
போகவேண்டாம்.
4. கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரட்டும்,
உங்கள் கால்களைக் கழுவி, மரத்தடியில்
சாய்ந்துகொண்டிருங்கள்.
5. நீங்கள் உங்கள் இருதயங்களைத் திடப்படுத்தக்
கொஞ்சம் அப்பம் கொண்டுவருகிறேன்; அப்புறம்
நீங்கள் உங்கள் வழியே போகலாம்; இதற்காகவே அடியேன்
இடம்வரைக்கும் வந்தீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: நீ
சொன்னபடி செய் என்றார்கள்.
6. அப்பொழுது ஆபிரகாம் தீவிரமாய்க் கூடாரத்தில்
சாராளிடத்திற்குப் போய்: நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லிய
மாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு என்றான்.
7. ஆபிரகாம் மாட்டுமந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றைப்
பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான்; அவன் அதைச்
சீக்கிரத்தில் சமைத்தான்.
8. ஆபிரகாம் வெண்ணெயையும் பாலையும் சமைப்பித்த
கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே
மரத்தடியில் நின்று கொண்டிருந்தான்; அவர்கள்
புசித்தார்கள்.
9. அவர்கள் அவனை நோக்கி: உன் மனைவி சாராள் எங்கே
என்றார்கள்? அதோ கூடாரத்தில் இருக்கிறாள் என்றான்.
10. அப்பொழுது அவர்: ஒரு உற்பவகாலத்திட்டத்தில்
நிச்சயமாய் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்;
அப்பொழுது உன் மனைவியாகிய சாராளுக்கு ஒரு
குமாரன் இருப்பான் என்றார். சாராள் அவருக்குப்
பின்புறமாய்க் கூடாரவாசலில் இதைக்
கேட்டுக்கொண்டிருந்தாள்.
11. ஆபிரகாமும் சாராளும் வயதுசென்று
முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரீகளுக்குள்ள வழிபாடு
சாராளுக்கு நின்றுபோயிற்று.
12. ஆகையால், சாராள் தன் உள்ளத்திலே நகைத்து: நான்
கிழவியும், என் ஆண்டவன் முதிர்ந்த வயதுள்ளவருமானபின்பு,
எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்.
13. அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள்
நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ
என்று சொல்வானேன்?
14. கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ?
உற்பவகாலத்திட்டத்தில் உன்னிடத்திற்குத் திரும்ப வருவேன்;
அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான்
என்றார்.
15. சாராள் பயந்து, நான் நகைக்கவில்லை என்று மறுத்தாள்.
அதற்கு அவர்: இல்லை, நீ நகைத்தாய் என்றார்.
16. பின்பு அந்தப் புருஷர் எழுந்து அவ்விடம்விட்டு, சோதோமை நோக்கிப்
போனார்கள்; ஆபிரகாமும் அவர்களோடே கூடப்போய்
வழிவிட்டனுப்பினான்.
17. அப்பொழுது கர்த்தர் : ஆபிரகாம் பெரிய பலத்த
ஜாதியாவதினாலும், அவனுக்குள் பூமியிலுள்ள சகல
ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படுவதினாலும்,
18. நான் செய்யப்போகிறதை ஆபிரகாமுக்கு மறைப்பேனோ?
19. கர்த்தர் ஆபிரகாமுக்குச் சொன்னதை
நிறைவேற்றும்படியாய் அவன் தன் பிள்ளைகளுக்கும், தனக்குப்
பின்வரும் தன் வீட்டாருக்கும்: நீங்கள் நீதியையும் நியாயத்தையும்
செய்து, கர்த்தருடைய வழியைக் காத்து நடவுங்கள் என்று
கட்டளையிடுவான் என்பதை அறிந்திருக்கிறேன் என்றார்.
20. பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல்
பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும்
கொடிதாயிருப்பதினாலும்,
21. நான் இறங்கிப்போய், என்னிடத்தில் வந்து எட்டின அதின்
கூக்குரலின்படியே அவர்கள் செய்திருக்கிறார்களோ இல்லையோ
என்று பார்த்து அறிவேன் என்றார்.
22. அப்பொழுது அந்தப் புருஷர் அவ்விடம்விட்டுச் சோதோமை
நோக்கிப் போனார்கள்; ஆபிரகாமோ பின்னும் கர்த்தருக்கு முன்பாக
நின்றுகொண்டிருந்தான்.
23. அப்பொழுது ஆபிரகாம் சமீபமாய்ச் சேர்ந்து:
துன்மார்க்கனோடே நீதிமானையும் அழிப்பீரோ?
24. பட்டணத்துக்குள்ளே ஒருவேளை ஐம்பது நீதிமான்கள்
இருப்பார்கள், அதற்குள் இருக்கும் அந்த ஐம்பது
நீதிமான்கள்நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ?
25. துன்மார்க்கனோடே நீதிமானையும் சங்கரிப்பது உமக்குத்
தூரமாயிருப்பதாக; நீதிமானையும் துன்மார்க்கனையும் சமமாய்
நடப்பிப்பது உமக்குத் தூரமாயிருப்பதாக; சர்வலோக
நியாயாதிபதி நீதிசெய்யாதிருப்பாரோ என்றான்.
26. அதற்குக் கர்த்தர் : நான் சோதோமில் ஐம்பது நீதிமான்களைக்
கண்டால், அவர்கள் நிமித்தம் அந்த ஸ்தலமுழுதையும் இரட்சிப்பேன்
என்றார்.
27. அப்பொழுது ஆபிரகாம் பிரதியுத்தரமாக: இதோ, தூளும்
சாம்பலுமாயிருக்கிற அடியேன் ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்.
28. ஒருவேளை ஐம்பது நீதிமான்களுக்கு ஐந்துபேர் குறைந்திருப்பார்கள்;
அந்த ஐந்துபேர்நிமித்தம் பட்டணமுழுதையும் அழிப்பீரோ என்றான்.
அதற்கு அவர்: நான் நாற்பத்தைந்து நீதிமான்களை அங்கே
கண்டால், அதை அழிப்பதில்லை என்றார்.
29. அவன் பின்னும் அவரோடே பேசி: நாற்பது நீதிமான்கள் அங்கே
காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நாற்பது
நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை என்றார்.
30. அப்பொழுது அவன்: நான் இன்னும் பேசுகிறேன்,
ஆண்டவருக்குக் கோபம் வராமலிருப்பதாக; முப்பது நீதிமான்கள்
அங்கே காணப்பட்டாலோ என்றான். அதற்கு அவர்: நான்
முப்பது நீதிமான்களை அங்கே கண்டால், அதை அழிப்பதில்லை
என்றார்.
31. அப்பொழுது அவன்: இதோ, ஆண்டவரோடே பேசத்துணிந்தேன்;
இருபது நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான்.
அதற்கு அவர்: இருபது நீதிமான்கள்நிமித்தம் அதை அழிப்பதில்லை
என்றார்.
32. அப்பொழுது அவன்: ஆண்டவருக்குக் கோபம்
வராதிருப்பதாக; நான் இன்னும் இந்த ஒருவிசைமாத்திரம்
பேசுகிறேன்; பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ
என்றான். அதற்கு அவர்: பத்து நீதிமான்கள்நிமித்தம் அதை
அழிப்பதில்லை என்றார்.
33. கர்த்தர் ஆபிரகாமோடே பேசிமுடிந்தபின்பு போய்விட்டார்;
ஆபிரகாமும் தன்னுடைய இடத்துக்குத் திரும்பினான்.
*
1. அந்த இரண்டு தூதரும் சாயங்காலத்திலே சோதோமுக்கு
வந்தார்கள்; லோத்து சோதோமின் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.
அவர்களைக் கண்டு, லோத்து எழுந்து எதிர்கொண்டு தரைமட்டும்
குனிந்து:
2. ஆண்டவன்மார்களே, அடியேனுடைய வீட்டுமுகமாய் நீங்கள்
திரும்பி, உங்கள் கால்களைக் கழுவி, இராத்தங்கி, காலையில்
எழுந்து பிரயாணப்பட்டுப் போகலாம் என்றான். அதற்கு
அவர்கள்: அப்படியல்ல, வீதியிலே இராத்தங்குவோம் என்றார்கள்.
3. அவன் அவர்களை மிகவும் வருந்திக்
கேட்டுக்கொண்டான்; அப்பொழுது
அவனிடத்திற்குத் திரும்பி, அவன் வீட்டிலே பிரவேசித்தார்கள். அவன்
புளிப்பில்லா அப்பங்களைச் சுட்டு, அவர்களுக்கு
விருந்துபண்ணினான், அவர்கள் புசித்தார்கள்.
4. அவர்கள் படுக்கும் முன்னே, சோதோம் பட்டணத்து மனிதராகிய
வாலிபர்முதல் கிழவர்மட்டுமுள்ள ஜனங்கள் அனைவரும்
நானாதிசைகளிலுமிருந்து வந்து, வீட்டைச் சூழ்ந்துகொண்டு,
5. லோத்தைக் கூப்பிட்டு: இந்த இராத்திரி உன்னிடத்தில் வந்த மனுஷர்
எங்கே? நாங்கள் அவர்களை அறியும்படிக்கு அவர்களை
எங்களிடத்தில் வெளியே கொண்டு வா
என்றார்கள்.
6. அப்பொழுது லோத்து வாசலுக்கு வெளியே வந்து,
தனக்குப் பின்னாலே கதவைப் பூட்டி, அவர்களிடத்தில் போய்:
7. சகோதரரே, இந்த அக்கிரமம் செய்யவேண்டாம்.
8. இதோ, புருஷரை அறியாத இரண்டு குமாரத்திகள் எனக்கு உண்டு;
அவர்களை உங்களிடத்திற்கு வெளியே
கொண்டுவருகிறேன், அவர்களுக்கு உங்கள் இஷ்டப்படி
செய்யுங்கள்; இந்தப்புருஷர் என் கூரையின் நிழலிலே
வந்தபடியால், இவர்களுக்கு மாத்திரம் ஒன்றும்
செய்யவேண்டாம் என்றான்.
9. அதற்கு அவர்கள்: அப்பாலே போ; பரதேசியாய் வந்த இவனா
நியாயம் பேசுகிறது? இப்பொழுது அவர்களுக்குச்
செய்வதைப்பார்க்கிலும் உனக்கு அதிக
பொல்லாப்புச் செய்வோம் என்று சொல்லி,
லோத்து என்பவனை மிகவும் நெருக்கிக் கதவை உடைக்கக்
கிட்டினார்கள்.
10. அப்பொழுது அந்தப் புருஷர்கள் தங்கள் கைகளை
வெளியே நீட்டி, லோத்தைத் தங்கள் அண்டைக்கு வீட்டுக்குள்
இழுத்துக்கொண்டு, கதவைப் பூட்டி,
11. தெருவாசலிலிருந்த சிறியோரும் பெரியோருமாகிய
மனிதருக்குக் குருட்டாட்டம் பிடிக்கப்பண்ணினார்கள்;
அப்பொழுது அவர்கள் வாசலைத் தேடித்தேடி
அலுத்துப்போனார்கள்.
12. பின்பு அந்தப் புருஷர் லோத்தை நோக்கி: இவ்விடத்தில் இன்னும்
உனக்கு யார் இருக்கிறார்கள்? மருமகனாவது, உன்
குமாரராவது, உன் குமாரத்திகளாவது, பட்டணத்தில்
உனக்குரிய எவர்களாவது இருந்தால், அவர்களை இந்த
ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக்கொண்டு போ.
13. நாங்கள் இந்த ஸ்தலத்தை அழிக்கப்போகிறோம்; இவர்கள் கூக்குரல்
கர்த்தருடைய சமுகத்தில் பெரிதாயிருக்கிறது; இதை அழிக்கக்
கர்த்தர் எங்களை அனுப்பினார் என்றார்கள்.
14. அப்பொழுது லோத்து புறப்பட்டு, தன் குமாரத்திகளை
விவாகம்பண்ணப்போகிற தன் மருமக்கள்மாரோடே பேசி: நீங்கள்
எழுந்து இந்த ஸ்தலத்தை விட்டுப் புறப்படுங்கள்; கர்த்தர் இந்தப்
பட்டணத்தை அழிக்கப்போகிறார் என்றான்; அவனுடைய
மருமக்கள்மாரின் பார்வைக்கு அவன்
பரியாசம்பண்ணுகிறதாகக் கண்டது.
15. கிழக்கு வெளுக்கும்போது அந்தத் தூதர் லோத்தை நோக்கி:
பட்டணத்திற்கு வரும் தண்டனையில் நீ அழியாதபடிக்கு எழுந்து, உன்
மனைவியையும், இங்கே இருக்கிற உன் இரண்டு குமாரத்திகளையும்
அழைத்துக்கொண்டுபோ என்று சொல்லி, அவனைத்
துரிதப்படுத்தினார்கள்.
16. அவன் தாமதித்துக்கொண்டிருக்கும்போது, கர்த்தர்
அவன்மேல் வைத்த இரக்கத்தினாலே, அந்தப் புருஷர் அவன்
கையையும், அவன் மனைவியின் கையையும், அவன் இரண்டு
குமாரத்திகளின் கையையும் பிடித்து, அவனைப் பட்டணத்திற்கு
வெளியே கொண்டுபோய் விட்டார்கள்.
17. அவர்களை வெளியே கொண்டுபோய் விட்டபின்பு,
அவர்: உன் ஜீவன் தப்ப ஓடிப்போ, பின்னிட்டுப் பாராதே; இந்தச்
சமபூமியில் எங்கும் நில்லாதே; நீ அழியாதபடிக்கு மலைக்கு ஓடிப்போ
என்றார்.
18. அதற்கு லோத்து: அப்படியல்ல ஆண்டவரே,
19. உமது கண்களில் உமது அடியேனுக்குக் கிருபை கிடைத்ததே; என்
பிராணனைக் காக்கத் தேவரீர் எனக்குச் செய்த கிருபையைப்
பெரிதாக விளங்கப்பண்ணினீர்; மலைக்கு ஓடிப்போக
என்னால் முடியாது, தீங்கு என்னைத் தொடரும், நான்
மரித்துப்போவேன்.
20. அதோ, அந்த ஊர் இருக்கிறதே, நான் அதற்கு
ஓடிப்போகத்தக்கதாய் அது கிட்ட இருக்கிறது, சின்னதுமாய்
இருக்கிறது; என் பிராணன் பிழைக்க நான் அங்கே ஓடிப்போகட்டும்,
அது சின்ன ஊர்தானே என்றான்.
21. அதற்கு அவர்: நீ கேட்டுக்கொண்ட ஊரை நான்
கவிழ்த்துப்போடாதபடிக்கு, இந்த விஷயத்திலும் உனக்கு
அநுக்கிரகம்பண்ணினேன்.
22. தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே
போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்;
ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.
23. லோத்து சோவாருக்குள் வரும்போது பூமியின்மேல் சூரியன் உதித்தது.
24. அப்பொழுது கர்த்தர் சோதோமின்மேலும்
கொமோராவின்மேலும், கர்த்தராலே வானத்திலிருந்து
கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி,
25. அந்தப் பட்டணங்களையும், அந்தச் சமபூமியனைத்தையும், அந்தப்
பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும்
அழித்துப்போட்டார்.
26. அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.
27. விடியற்காலத்தில் ஆபிரகாம் எழுந்து, தான் கர்த்தருக்கு
முன்பாக நின்ற இடத்திற்குப் போய்,
28. சோதோம் கொமோரா பட்டணங்களின் திசையையும்,
சமபூமியாகிய தேசம் முழுவதையும் நோக்கிப் பார்த்தான்; அந்தப்
பூமியின் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று.
29. தேவன் அந்தச் சமபூமியின் பட்டணங்களை அழிக்கும்போது, தேவன்
ஆபிரகாமை நினைத்து, லோத்து குடியிருந்த பட்டணங்களைத் தாம்
கவிழ்த்துப்போடுகையில், லோத்தை அந்த அழிவின் நடுவிலிருந்து
தப்பிப்போகும்படி அனுப்பி விட்டார்.
30. பின்பு லோத்து சோவாரிலே குடியிருக்கப் பயந்து, சோவாரை விட்டுப்போய்,
அவனும் அவனோடேகூட அவனுடைய இரண்டு குமாரத்திகளும் மலையிலே
வாசம்பண்ணினார்கள்; அங்கே அவனும் அவனோடேகூட அவனுடைய
இரண்டு குமாரத்திகளும் ஒரு கெபியிலே குடியிருந்தார்கள்.
31. அப்பொழுது மூத்தவள் இளையவளைப் பார்த்து: நம்முடைய
தகப்பன் முதிர்வயதானார், பூமியெங்கும் நடக்கிற
முறைமையின்படியே நம்மோடே சேரப் பூமியிலே ஒரு புருஷனும் இல்லை.
32. நம்முடைய தகப்பனால் சந்ததி உண்டாகும்படிக்கு, அவருக்கு
மதுவைக் குடிக்கக்கொடுத்து, அவரோடே சயனிப்போம் வா
என்றாள்.
33. அப்படியே அன்று இரவிலே, தங்கள் தகப்பனுக்கு மதுவைக் குடிக்கக்
கொடுத்தார்கள். மூத்தவள் போய், தன் தகப்பனோடே
சயனித்தாள்; அவள் சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன்
உணராதிருந்தான்.
34. மறுநாளிலே மூத்தவள் இளையவளைப் பார்த்து: நேற்று ராத்திரி
நான் தகப்பனோடே சயனித்தேன்; இன்று ராத்திரியும் மதுவைக்
குடிக்கக் கொடுப்போம், நம்முடைய தகப்பனால் சந்ததி
உண்டாகும்படி நீ போய் அவரோடே சயனி என்றாள்.
35. அப்படியே அன்று ராத்திரியிலும் தங்கள் தகப்பனுக்கு மதுவைக்
குடிக்கக் கொடுத்தார்கள். அப்பொழுது
இளையவள் எழுந்து போய், அவனோடே சயனித்தாள்; அவள்
சயனித்ததையும் எழுந்திருந்ததையும் அவன் உணராதிருந்தான்.
36. இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள்
தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
37. மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப்
என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற
மோவாபியருக்குத் தகப்பன்.
38. இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப்
பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும்
இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
*
1. ஆபிரகாம் அவ்விடம்விட்டு, தென்தேசத்திற்குப்
பிரயாணம்பண்ணி, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி,
கேராரிலே தங்கினான்.
2. அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் தன் சகோதரி
என்று சொன்னதினாலே, கேராரின் ராஜாவாகிய
அபிமெலேக்கு ஆள் அனுப்பிச் சாராளை அழைப்பித்தான்.
3. தேவன் இரவிலே அபிமெலேக்குக்குச் சொப்பனத்திலே
தோன்றி: நீ அழைப்பித்த ஸ்திரீயின்நிமித்தம் நீ செத்தாய்; அவள்
ஒருவனுடைய மனைவியாயிருக்கிறாளே என்றார்.
4. அபிமெலேக்கு அவளைச் சேராதிருந்தான். ஆகையால் அவன்:
ஆண்டவரே, நீதியுள்ள ஜனங்களை அழிப்பீரோ?
5. இவள் தன் சகோதரி என்று அவன் என்னோடே
சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும்
சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான
கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
6. அப்பொழுது தேவன்: உத்தம இருதயத்தோடே நீ இதைச்
செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு
விரோதமாகப் பாவம் செய்யாதபடிக்கு உன்னைத் தடுத்தேன்;
ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு
இடங்கொடுக்கவில்லை.
7. அந்த மனுஷனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன்
ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைக்கும்படிக்கு அவன் உனக்காக வேண்டுதல்
செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும்
உன்னைச் சேர்ந்த யாவரும் சாகவே சாவீர்கள் என்று
அறிவாயாக என்று சொப்பனத்திலே அவனுக்குச்
சொன்னார்.
8. அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன்
ஊழியக்காரரையெல்லாம் அழைப்பித்து, இந்தச்
சங்கதிகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி
சொன்னான்; அந்த மனுஷர் மிகவும் பயந்தார்கள்.
9. அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து;
நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என்
ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம்
சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம்
செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில்
செய்தாயே என்றான்.
10. பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: என்னத்தைக்
கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய் என்றான்.
11. அதற்கு ஆபிரகாம்: இவ்விடத்தில் தெய்வபயம்
இல்லையென்றும், என் மனைவியினிமித்தம் என்னைக்
கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
12. அவள் என் சகோதரி என்பதும் மெய்தான்; அவள் என்
தகப்பனுக்குக் குமாரத்தி, என் தாய்க்குக் குமாரத்தியல்ல;
அவள் எனக்கு மனைவியானாள்.
13. என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் தேசாந்தரியாய்த்
திரியும்படி செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும்
இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ
எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில்
சொல்லியிருந்தேன் என்றான்
14. அப்பொழுது அபிமெலேக்கு ஆடு மாடுகளையும்,
வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக்
கொடுத்து, அவன் மனைவியாகிய சாராளையும்
அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
15. பின்னும் அபிமெலேக்கு: இதோ, என் தேசம் உனக்கு முன்பாக
இருக்கிறது; உன் பார்வைக்குச் சம்மதியான இடத்திலே குடியிரு
என்று சொன்னான்.
16. பின்பு சாராளை நோக்கி: உன் சகோதரனுக்கு ஆயிரம்
வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற
எல்லார் முன்பாகவும், மற்ற யாவர் முன்பாகவும், இது உன்
முகத்து முக்காட்டுக்காவதாக என்றான்; இப்படி அவள்
கடிந்து கொள்ளப்பட்டாள்.
17. ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளின்நிமித்தம் கர்த்தர்
அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம்
அடைத்திருந்தபடியால்,
18. ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்;
அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவன்
மனைவியையும், அவன் வேலைக்காரிகளையும் குணமாக்கி,
பிள்ளைபெறும்படி அநுக்கிரகம்பண்ணினார்.
*
*
1. பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும்
இருந்தது.
2. ஜனங்கள் கிழக்கேயிருந்து பிரயாணம்பண்ணுகையில்,
சிநெயார் தேசத்திலே சமபூமியைக்கண்டு, அங்கே
குடியிருந்தார்கள்.
3. அப்பொழுது அவர்கள்: நாம் செங்கல் அறுத்து,
அதை நன்றாய்ச் சுடுவோம் வாருங்கள் என்று
ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்;
கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக
நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
4. பின்னும் அவர்கள்: நாம் பூமியின்மீதெங்கும்
சிதறிப்போகாதபடிக்கு, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தை
அளாவும் சிகரமுள்ள ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பேர்
உண்டாகப் பண்ணுவோம் வாருங்கள் என்று
சொல்லிக்கொண்டார்கள்.
5. மனுபுத்திரர் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக்
கர்த்தர் இறங்கினார்.
6. அப்பொழுது கர்த்தர் : இதோ, ஜனங்கள் ஒரே கூட்டமாய்
இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும்
இருக்கிறது; அவர்கள் இதைச்
செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும்
தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று
இருக்கிறார்கள்.
7. நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர்
அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத்
தாறுமாறாக்குவோம் என்றார்.
8. அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து
பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்;
அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள்.
9. பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில்
தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது;
கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும்
சிதறிப்போகப்பண்ணினார்.
10. சேமுடைய வம்சவரலாறு: ஜலப்பிரளயம் உண்டாகி இரண்டு
வருஷத்திற்குப் பின்பு, சேம் நூறுவயதானபோது, அர்பக்சாத்தைப்
பெற்றான்.
11. சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் ஐந்நூறு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
12. அர்பக்சாத் முப்பத்தைந்து வயதானபோது சாலாவைப்
பெற்றான்.
13. சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் நானூற்று மூன்று
வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
14. சாலா முப்பது வயதானபோது, ஏபேரைப் பெற்றான்.
15. ஏபேரைப் பெற்றபின் சாலா நானூற்று மூன்று வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
16. ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.
17. பேலேகைப் பெற்றபின் ஏபேர் நானூற்று முப்பது வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
18. பேலேகு முப்பது வயதானபோது, ரெகூவைப் பெற்றான்.
19. ரெகூவைப் பெற்றபின் பேலேகு இருநூற்றொன்பது
வருஷம் உயிரோடிருந்து குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
20. ரெகூ முப்பத்திரண்டு வயதானபோது, செரூகைப்
பெற்றான்.
21. செரூகைப் பெற்றபின் ரெகூ இருநூற்றேழு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
22. செரூகு முப்பது வயதானபோது, நாகோரைப் பெற்றான்.
23. நாகோரைப் பெற்றபின் செரூகு இருநூறு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
24. நாகோர் இருபத்தொன்பது வயதானபோது, தேராகைப்
பெற்றான்.
25. தேராகைப் பெற்றபின் நாகோர் நூற்றுப்பத்தொன்பது
வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
26. தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான்
என்பவர்களைப் பெற்றான்.
27. தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர்,
ஆரான் என்பவர்களைப் பெற்றான்; ஆரான் லோத்தைப்
பெற்றான்.
28. ஆரான் தன் ஜந்மபூமியாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப்
பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு மரிக்குமுன்னே
மரித்தான்.
29. ஆபிராமும் நாகோரும் தங்களுக்குப்
பெண்கொண்டார்கள்; ஆபிராமுடைய மனைவிக்குச்
சாராய் என்று பேர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பேர்;
இவள் ஆரானுடைய குமாரத்தி; அந்த ஆரான் மில்க்காளுக்கும்
இஸ்காளுக்கும் தகப்பன்.
30. சாராய்க்குப் பிள்ளையில்லை; மலடியாயிருந்தாள்.
31. தேராகு தன் குமாரனாகிய ஆபிராமையும், ஆரானுடைய
குமாரனும் தன் பேரனுமாயிருந்த லோத்தையும், தன் குமாரன்
ஆபிராமுடைய மனைவியாகிய தன் மருமகள் சாராயையும்
அழைத்துக்கொண்டு, அவர்களுடனே ஊர் என்கிற
கல்தேயருடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்துக்குப் போகப்
புறப்பட்டான்; அவர்கள் ஆரான்மட்டும் வந்தபோது, அங்கே
இருந்துவிட்டார்கள்.
32. தேராகுடைய ஆயுசுநாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு
ஆரானிலே மரித்தான்.
*
1. கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும்,
உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக்
காண்பிக்கும் தேசத்துக்குப் போ.
2. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை
ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ
ஆசீர்வாதமாய் இருப்பாய்.
3. உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச்
சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம்
உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
4. கர்த்தர் ஆபிராமுக்குச் சொன்னபடியே அவன்
புறப்பட்டுப் போனான்; லோத்தும் அவனோடேகூடப் போனான். ஆபிராம்
ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து
வயதுள்ளவனாயிருந்தான்.
5. ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய
குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள்
சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த
ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான்
தேசத்துக்குப் புறப்பட்டுப்போய், கானான் தேசத்திலே சேர்ந்தார்கள்.
6. ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும்
இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்;
அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.
7. கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத்
தேசத்தைக் கொடுப்பேன் என்றார். அப்பொழுது
அவன் தனக்குத் தரிசனமான கர்த்தருக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக்
கட்டினான்.
8. பின்பு அவன் அவ்விடம்விட்டுப் பெயர்ந்து,
பெத்தேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பெத்தேல்
தனக்கு மேற்காகவும் ஆயீ கிழக்காகவும் இருக்கக் கூடாரம்
போட்டு, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, கர்த்தருடைய
நாமத்தைத் தொழுதுகொண்டான்.
9. அதின்பின் ஆபிராம் புறப்பட்டு, தெற்கே
பிரயாணம்பண்ணிக்கொண்டு போனான்.
10. அத்தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; தேசத்திலே பஞ்சம்
கொடிதாயிருந்தபடியால், ஆபிராம் எகிப்து தேசத்திலே
தங்கும்படி அவ்விடத்துக்குப் போனான்.
11. அவன் எகிப்துக்குச் சமீபமாய் வந்தபோது, தன் மனைவி
சாராயைப் பார்த்து: நீ பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீ என்று
அறிவேன்.
12. எகிப்தியர் உன்னைக் காணும்போது, இவள் அவனுடைய மனைவி
என்று சொல்லி, என்னைக் கொன்றுபோட்டு, உன்னை
உயிரோடே வைப்பார்கள்.
13. ஆகையால், உன்னிமித்தம் எனக்கு நன்மை உண்டாகும்படிக்கும்,
உன்னாலே என் உயிர் பிழைக்கும்படிக்கும், நீ உன்னை என் சகோதரி
என்று சொல் என்றான்.
14. ஆபிராம் எகிப்திலே வந்தபோது, எகிப்தியர் அந்த ஸ்திரீயை மிகுந்த
அழகுள்ளவளென்று கண்டார்கள்.
15. பார்வோனுடைய பிரபுக்களும் அவளைக் கண்டு, பார்வோனுக்கு
முன்பாக அவளைப் புகழ்ந்தார்கள். அப்பொழுது அந்த
ஸ்திரீ பார்வோனுடைய அரமனைக்குக்
கொண்டுபோகப்பட்டாள்.
16. அவள் நிமித்தம் அவன் ஆபிராமுக்குத் தயைபாராட்டினான்;
அவனுக்கு ஆடுமாடுகளும், கழுதைகளும், வேலைக்காரரும்,
வேலைக்காரிகளும், கோளிகைக் கழுதைகளும், ஒட்டகங்களும் கிடைத்தது.
17. ஆபிராமுடைய மனைவியாகிய சாராயின் நிமித்தம் கர்த்தர்
பார்வோனையும், அவன் வீட்டாரையும் மகா வாதைகளால்
வாதித்தார்.
18. அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு
ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ
எனக்கு அறிவியாமற் போனதென்ன?
19. இவளை உன் சகோதரி என்று நீ சொல்லவேண்டுவது
என்ன? இவளை நான் எனக்கு
மனைவியாகக்கொண்டிருப்பேனே; இதோ உன் மனைவி; இவளை
அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னான்.
20. பார்வோன் அவனைக்குறித்துத் தன் மனுஷருக்குக் கட்டளை
கொடுத்தான்; அவர்கள் அவனையும், அவன் மனைவியையும்
அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் அனுப்பிவிட்டார்கள்.
*
1. ஆபிராமும், அவன் மனைவியும், அவனுக்கு உண்டான யாவும்,
அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு, தென்திசையில் வந்தார்கள்.
2. ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும்
பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான்.
3. அவன் தன் பிரயாணங்களிலே தெற்கேயிருந்து பெத்தேல்
மட்டும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு
கூடாரம்போட்டதும்,
4. தான் முதல்முதல் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான
ஸ்தலமட்டும் போனான்; அங்கே ஆபிராம் கர்த்தருடைய நாமத்தைத்
தொழுதுகொண்டான்.
5. ஆபிராமுடனே வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் கூடாரங்களும்
இருந்தன.
6. அவர்கள் ஒருமித்துக் குடியிருக்க அந்தப் பூமி அவர்களைத்
தாங்கக்கூடாதிருந்தது; அவர்களுடைய ஆஸ்தி
மிகுதியாயிருந்தபடியால், அவர்கள் ஒருமித்து வாசம்பண்ண
ஏதுவில்லாமற்போயிற்று.
7. ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும்
வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே
கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.
8. ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும்
உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.
9. இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது
அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம்
போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால்,
நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.
10. அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்
பார்த்து; யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம்
பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும்
கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம்
வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்து
தேசத்தைப்போலவும் இருந்தது.
11. அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி
முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே
பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர்
விட்டுப் பிரிந்தார்கள்.
12. ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த
யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில்
வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.
13. சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு
முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.
14. லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி:
உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து
வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
15. நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன்
சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
16. உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்;
ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும்
எண்ணப்படும்.
17. நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து
திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.
18. அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப்
பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின்
சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக்
கட்டினான்.
*
1. சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும்,
ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும் ஏலாமின்
ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின்
ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;
2. அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும்,
கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும்,
அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும்,
செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார்
என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.
3. இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம்
பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.
4. இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து,
பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள்.
5. பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே
கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த
ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும்,
சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,
6. சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு
அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,
7. திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து,
அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே
குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.
8. அப்பொழுது சோதோமின் ராஜாவும்,
கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும்,
செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின்
ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே,
9. ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும்,
ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின்
ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின்
ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த
ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும்
யுத்தம்பண்ணினார்கள்.
10. அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும்
கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள்
முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு
ஓடிப்போனார்கள்.
11. அப்பொழுது அவர்கள் சோதோமிலும்
கொமோராவிலுமுள்ள பொருள்கள்
எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும்
எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
12. ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே
குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும்
கொண்டுபோய்விட்டார்கள்.
13. தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில்
வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை
செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும்
சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே
அப்பொழுது குடியிருந்தான்.
14. தன் சகோதரன் சிறையாகக் கொண்டுபோகப்பட்டதை
ஆபிராம் கேள்விப்பட்டபோது, அவன் தன் வீட்டிலே பிறந்த
கைபடிந்தவர்களாகிய முந்நூற்றுப் பதினெட்டு ஆட்களுக்கும்
ஆயுதம் தரிப்பித்து, தாண் என்னும் ஊர்மட்டும் அவர்களைத்
தொடர்ந்து,
15. இராக்காலத்திலே அவனும் அவன் வேலைக்காரரும் பிரிந்து,
பவிஞ்சுகளாய் அவர்கள்மேல் விழுந்து, அவர்களை முறியடித்து,
தமஸ்குவுக்கு இடதுபுறமான ஓபாமட்டும் துரத்தி,
16. சகல பொருள்களையும்
திருப்பிக்கொண்டுவந்தான்; தன் சகோதரனாகிய
லோத்தையும், அவனுடைய பொருள்களையும், ஸ்திரீகளையும்,
ஜனங்களையும் திருப்பிக்கொண்டுவந்தான்.
17. அவன் கெதர்லாகோமேரையும், அவனோடிருந்த
ராஜாக்களையும் முறியடித்துத் திரும்பிவருகிறபோது, சோதோமின் ராஜா
புறப்பட்டு, ராஜாவின் பள்ளத்தாக்கு என்னும் சாவே
பள்ளத்தாக்குமட்டும் அவனுக்கு எதிர்கொண்டுபோனான்.
18. அன்றியும், உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த
சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும்
திராட்சரசமும் கொண்டுவந்து,
19. அவனை ஆசீர்வதித்து: வானத்தையும் பூமியையும் உடையவராகிய
உன்னதமான தேவனுடைய ஆசீர்வாதம் ஆபிராமுக்கு
உண்டாவதாக.
20. உன் சத்துருக்களை உன் கையில் ஒப்புக்கொடுத்த
உன்னதமான தேவனுக்கு ஸ்தோத்திரம் என்று
சொன்னான். இவனுக்கு ஆபிராம் எல்லாவற்றிலும்
தசமபாகம் கொடுத்தான்.
21. சோதோமின் ராஜா ஆபிராமை நோக்கி: ஜனங்களை எனக்குத்
தாரும், பொருள்களை நீர் எடுத்துக்கொள்ளும்
என்றான்.
22. அதற்கு, ஆபிராம் சோதோமின் ராஜாவைப் பார்த்து: ஆபிராமை
ஐசுவரியவானாக்கினேன் என்று நீர் சொல்லாதபடிக்கு
நான் ஒரு சரட்டையாகிலும் பாதரட்சையின் வாரையாகிலும்,
உமக்கு உண்டானவைகளில் யாதொன்றையாகிலும்
எடுத்துக்கொள்ளேன் என்று,
23. வானத்தையும் பூமியையும் உடையவராகிய உன்னதமான
தேவனாகிய கர்த்தருக்கு நேராக என் கையை உயர்த்துகிறேன்.
24. வாலிபர் சாப்பிட்டது போக, என்னுடனே வந்த ஆநேர், எஸ்கோல்,
மம்ரே என்னும் புருஷருடைய பங்குமாத்திரமே வரவேண்டும்; இவர்கள்
தங்கள் பங்கை எடுத்துக்கொள்ளட்டும் என்றான்.
*
1. இந்தக் காரியங்கள் நடந்தபின்பு, கர்த்தருடைய வார்த்தை
ஆபிராமுக்குத் தரிசனத்திலே உண்டாகி, அவர்: ஆபிராமே, நீ
பயப்படாதே; நான் உனக்குக் கேடகமும், உனக்கு மகா
பெரிய பலனுமாயிருக்கிறேன் என்றார்.
2. அதற்கு ஆபிராம்: கர்த்தராகிய ஆண்டவரே, அடியேனுக்கு
என்ன தருவீர்? நான் பிள்ளையில்லாமல் இருக்கிறேனே; தமஸ்கு
ஊரானாகிய இந்த எலியேசர் என் வீட்டு விசாரணைக்
கர்த்தனாய் இருக்கிறானே என்றான்.
3. பின்னும் ஆபிராம்: தேவரீர் எனக்குப் புத்திர சந்தானம்
அருளவில்லை; இதோ என் வீட்டிலே பிறந்த பிள்ளை எனக்குச்
சுதந்தரவாளியாய் இருக்கிறான் என்றான்.
4. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு
உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன்
கர்ப்பப்பிறப்பாயிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான்
என்று சொல்லி,
5. அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து
பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால்,
அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி:
உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.
6. அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு
நீதியாக எண்ணினார்.
7. பின்னும் அவர் அவனை நோக்கி: இந்தத் தேசத்தை உனக்குச்
சுதந்தரமாகக் கொடுக்கும்பொருட்டு, உன்னை
ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்திலிருந்து அழைத்து வந்த கர்த்தர்
நானே என்றார்.
8. அதற்கு அவன்: கர்த்தராகிய ஆண்டவரே, நான் அதைச்
சுதந்தரித்துக்கொள்வேன் என்று எதினால் அறிவேன்
என்றான்.
9. அதற்கு அவர்: மூன்று வயதுக் கிடாரியையும், மூன்று வயது
வெள்ளாட்டையும், மூன்று வயது ஆட்டுக்கடாவையும், ஒரு
காட்டுப்புறாவையும், ஒரு புறாக்குஞ்சையும், என்னிடத்தில்
கொண்டுவா என்றார்.
10. அவன் அவைகள் எல்லாவற்றையும் அவரிடத்தில்
கொண்டுவந்து, அவைகளை நடுவாகத் துண்டித்து,
துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான்;
பட்சிகளை அவன் துண்டிக்கவில்லை.
11. பறவைகள் அந்த உடல்களின்மேல் இறங்கின; அவைகளை ஆபிராம்
துரத்தினான்.
12. சூரியன் அஸ்தமிக்கும்போது, ஆபிராமுக்கு அயர்ந்த நித்திரை
வந்தது; திகிலும் காரிருளும் அவனை மூடிக்கொண்டது.
13. அப்பொழுது அவர் ஆபிராமை நோக்கி: உன் சந்ததியார்
தங்களுடையதல்லாத அந்நிய தேசத்திலே பரதேசிகளாயிருந்து,
அத்தேசத்தாரைச் சேவிப்பார்கள் என்றும், அவர்களால் நானூறு
வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், நீ நிச்சயமாய்
அறியக்கடவாய்.
14. இவர்கள் சேவிக்கும் ஜாதிகளை நான் நியாயந்தீர்ப்பேன்;
பின்பு மிகுந்த பொருள்களுடனே புறப்பட்டு வருவார்கள்.
15. நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல
முதிர்வயதிலே அடக்கம்பண்ணப்படுவாய்.
16. நாலாம் தலைமுறையிலே அவர்கள் இவ்விடத்துக்குத் திரும்ப
வருவார்கள்; ஏனென்றால் எமோரியருடைய அக்கிரமம்
இன்னும் நிறைவாகவில்லை என்றார்.
17. சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற
சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற
அக்கினிஜுவாலையும் தோன்றின.
18. அந்நாளிலே கர்த்தர் ஆபிராமோடே உடன்படிக்கைபண்ணி,
எகிப்தின் நதி துவக்கி ஐபிராத்து நதி என்னும் பெரிய
நதிமட்டுமுள்ளதும்
19. கேனியரும், கெனிசியரும், கத்மோனியரும்,
20. ஏத்தியரும், பெரிசியரும், ரெப்பாயீமியரும்,
21. எமோரியரும், கானானியரும், கிர்காசியரும், எபூசியரும்
என்பவர்கள் இருக்கிறதுமான இந்தத் தேசத்தை உன் சந்ததிக்குக்
கொடுத்தேன் என்றார்.
*
*
1. மனுஷர் பூமியின்மேல் பெருகத் துவக்கி, அவர்களுக்குக்
குமாரத்திகள் பிறந்தபோது:
2. தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக
சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, அவர்களுக்குள்ளே
தங்களுக்குப் பெண்களைத்
தெரிந்துகொண்டார்கள்.
3. அப்பொழுது கர்த்தர் : என் ஆவி என்றைக்கும் மனுஷனோடே
போராடுவதில்லை; அவன் மாம்சந்தானே, அவன் இருக்கப் போகிற
நாட்கள் நூற்றிருபது வருஷம் என்றார்.
4. அந்நாட்களில் இராட்சதர் பூமியிலே இருந்தார்கள்; பின்பு
தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளோடே கூடுகிறதினால், இவர்கள்
அவர்களுக்குப் பிள்ளைகளைப் பெற்றபோது, இவர்களும் பூர்வத்தில்
பேர்பெற்ற மனுஷராகிய பலவான்களானார்கள்.
5. மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன்
இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும்
பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,
6. தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர்
மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு
விசனமாயிருந்தது.
7. அப்பொழுது கர்த்தர் : நான் சிருஷ்டித்த மனுஷனைப்
பூமியின்மேல் வைக்காமல், மனுஷன் முதற்கொண்டு,
மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகாயத்துப் பறவைகள்
பரியந்தமும் உண்டாயிருக்கிறவைகளை நிக்கிரகம்பண்ணுவேன்;
நான் அவர்களை உண்டாக்கினது எனக்கு
மனஸ்தாபமாயிருக்கிறது என்றார்.
8. நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.
9. நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில்
இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்;
நோவா தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்தான்.
10. நோவா சேம் காம் யாப்பேத் என்னும் மூன்று குமாரரைப்
பெற்றான்.
11. பூமியானது தேவனுக்கு முன்பாகச் சீர்கெட்டதாயிருந்தது;
பூமி கொடுமையினால் நிறைந்திருந்தது.
12. தேவன் பூமியைப் பார்த்தார்; இதோ அது
சீர்கெட்டதாயிருந்தது; மாம்சமான யாவரும் பூமியின்மேல்
தங்கள் வழியைக் கெடுத்துக்கொண்டிருந்தார்கள்.
13. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி: மாம்சமான
யாவரின் முடிவும் எனக்கு முன்பாக வந்தது; அவர்களாலே பூமி
கொடுமையினால் நிறைந்தது; நான் அவர்களைப்
பூமியோடுங்கூட அழித்துப்போடுவேன்.
14. நீ கொப்பேர் மரத்தால் உனக்கு ஒரு பேழையை
உண்டாக்கு; அந்தப் பேழையிலே அறைகளை உண்டுபண்ணி, அதை
உள்ளும் புறம்புமாக கீல்பூசு.
15. நீ அதைப் பண்ணவேண்டிய விதம் என்னவென்றால்,
பேழையின் நீளம் முந்நூறு முழமும், அதின் அகலம் ஐம்பது முழமும்,
அதின் உயரம் முப்பது முழமுமாய் இருக்கவேண்டும்.
16. நீ பேழைக்கு ஓர் ஜன்னலை உண்டுபண்ணி, மேல்தட்டுக்கு ஒரு முழத்
தாழ்த்தியிலே அதைச் செய்துமுடித்து, பேழையின் கதவை அதின்
பக்கத்தில் வைத்து, கீழ் அறைகளையும், இரண்டாம் தட்டின்
அறைகளையும், மூன்றாம் தட்டின் அறைகளையும் பண்ணவேண்டும்.
17. வானத்தின் கீழே ஜீவசுவாசமுள்ள சகல
மாம்சஜந்துக்களையும் அழிக்க நான் பூமியின்மேல் ஜலப்பிரளயத்தை
வரப்பண்ணுவேன்; பூமியிலுள்ள யாவும் மாண்டுபோம்.
18. ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்;
நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன்
குமாரரின் மனைவிகளும், பேழைக்குள் பிரவேசியுங்கள்.
19. சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும்
பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு
உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே
சேர்த்துக்கொள்.
20. ஜாதிஜாதியான பறவைகளிலும், ஜாதிஜாதியான
மிருகங்களிலும், பூமியிலுள்ள சகல ஜாதிஜாதியான ஊரும்
பிராணிகளிலும், வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உயிரோடே
காக்கப்படுவதற்கு உன்னிடத்திலே வரக்கடவது.
21. உனக்கும் அவைகளுக்கும் ஆகாரமாகச் சகலவித
போஜனபதார்த்தங்களையும் சேர்த்து, உன்னிடத்தில்
வைத்துக்கொள் என்றார்.
22. நோவா அப்படியே செய்தான்; தேவன் தனக்குக்
கட்டளையிட்டபடியெல்லாம் அவன் செய்து முடித்தான்.
*
1. கர்த்தர் நோவாவை நோக்கி: நீயும் உன் வீட்டார் அனைவரும்
பேழைக்குள் பிரவேசியுங்கள்; இந்தச் சந்ததியில் உன்னை எனக்கு
முன்பாக நீதிமானாகக் கண்டேன்.
2. பூமியின்மீதெங்கும் வித்தை உயிரோடே
காக்கும்பொருட்டு, நீ சுத்தமான சகல மிருகங்களிலும்,
ஆணும் பெண்ணுமாக எவ்வேழு ஜோடும், சுத்தமல்லாத
மிருகங்களில் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு
ஜோடும்,
3. ஆகாயத்துப் பறவைகளிலும், சேவலும் பேடுமாக எவ்வேழு ஜோடும்
உன்னிடத்தில் சேர்த்துக்கொள்.
4. இன்னும் ஏழுநாள் சென்றபின்பு, நாற்பதுநாள் இரவும்
பகலும் பூமியின்மேல் மழையை வருஷிக்கப்பண்ணி, நான்
உண்டாக்கின ஜீவஜந்துக்கள் அனைத்தையும் பூமியின்மேல்
இராதபடிக்கு நிக்கிரகம் பண்ணுவேன் என்றார்.
5. நோவா தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியெல்லாம்
செய்தான்.
6. ஜலப்பிரளயம் பூமியின்மேல் உண்டானபோது, நோவா அறுநூறு
வயதாயிருந்தான்.
7. ஜலப்பிரளயத்துக்குத் தப்பும்படி நோவாவும் அவனுடனேகூட அவன்
குமாரரும், அவன் மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும்
பேழைக்குள் பிரவேசித்தார்கள்.
8. தேவன் நோவாவுக்குக் கட்டளையிட்டபடியே, சுத்தமான
மிருகங்களிலும், சுத்தமல்லாத மிருகங்களிலும், பூமியின்மேல் ஊரும்
பிராணிகள் எல்லாவற்றிலும்,
9. ஆணும் பெண்ணும் ஜோடு ஜோடாக நோவாவிடத்தில்
பேழைக்குட்பட்டன.
10. ஏழுநாள் சென்றபின்பு பூமியின்மேல் ஜலப்பிரளயம்
உண்டாயிற்று.
11. நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம்
மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின்
ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின்
மதகுகளும் திறவுண்டன.
12. நாற்பதுநாள் இரவும் பகலும் பூமியின்மேல் பெருமழை
பெய்தது.
13. அன்றைத்தினமே நோவாவும், நோவாவின் குமாரராகிய சேமும்
காமும் யாப்பேத்தும், அவர்களுடனேகூட நோவாவின் மனைவியும்,
அவன் குமாரரின் மூன்று மனைவிகளும், பேழைக்குள்
பிரவேசித்தார்கள்.
14. அவர்களோடு ஜாதிஜாதியான சகலவிதக்
காட்டுமிருகங்களும், ஜாதிஜாதியான சகலவித
நாட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊருகிற ஜாதிஜாதியான
சகலவித ஊரும் பிராணிகளும், ஜாதிஜாதியான சகலவிதப்
பறவைகளும், பலவிதமான சிறகுகளுள்ள சகலவிதப் பட்சிகளும்
பிரவேசித்தன.
15. இப்படியே ஜீவசுவாசமுள்ள மாம்ச ஜந்துக்களெல்லாம்
ஜோடு ஜோடாக நோவாவிடத்தில் பேழைக்குள் பிரவேசித்தன.
16. தேவன் அவனுக்குக் கட்டளையிட்டபடியே, ஆணும்
பெண்ணுமாகச் சகலவித மாம்சஜந்துக்களும் உள்ளே
பிரவேசித்தன; அப்பொழுது கர்த்தர் அவனை உள்ளேவிட்டுக்
கதவை அடைத்தார்.
17. ஜலப்பிரளயம் நாற்பது நாள் பூமியின்மேல் உண்டானபோது,
ஜலம் பெருகி, பேழையைக் கிளம்பப்பண்ணிற்று; அது பூமிக்குமேல்
மிதந்தது.
18. ஜலம் பெருவெள்ளமாகி, பூமியின்மேல் மிகவும்
பெருகிற்று; பேழையானது ஜலத்தின்மேல்
மிதந்துகொண்டிருந்தது.
19. ஜலம் பூமியின்மேல் மிகவும் அதிகமாய்ப்
பெருகினதினால், வானத்தின்கீழ் எங்குமுள்ள உயர்ந்த
மலைகளெல்லாம் மூடப்பட்டன.
20. மூடப்பட்ட மலைகளுக்கு மேலாய்ப் பதினைந்துமுழ உயரத்திற்கு
ஜலம் பெருகிற்று.
21. அப்பொழுது மாம்சஜந்துக்களாகிய பறவைகளும்,
நாட்டுமிருகங்களும், காட்டுமிருகங்களும், பூமியின்மேல் ஊரும்
பிராணிகள் யாவும், எல்லா நரஜீவன்களும், பூமியின்மேல்
சஞ்சரிக்கிறவைகள் யாவும் மாண்டன.
22. வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும்
நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள் எல்லாம் மாண்டுபோயின.
23. மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப்
பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள்
யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு
நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும்
மாத்திரம் காக்கப்பட்டன.
24. ஜலம் பூமியின்மேல் நூற்றைம்பது நாள் மிகவும்
பிரவாகித்துக்கொண்டிருந்தது.
*
1. தேவன் நோவாவையும், அவனுடனே பேழையிலிருந்த சகல
காட்டுமிருகங்களையும், சகல நாட்டுமிருகங்களையும்
நினைத்தருளினார்; தேவன் பூமியின்மேல் காற்றை
வீசப்பண்ணினார், அப்பொழுது ஜலம் அமர்ந்தது.
2. ஆழத்தின் ஊற்றுக்கண்களும், வானத்தின் மதகுகளும்
அடைபட்டன; வானத்து மழையும் நின்று போயிற்று.
3. ஜலம் பூமியிலிருந்து நாளுக்குநாள் வற்றிக்கொண்டே
வந்தது, நூற்றைம்பது நாளுக்குப் பின்பு ஜலம் வடிந்தது.
4. ஏழாம்மாதம் பதினேழாம் தேதியிலே பேழை அரராத் என்னும்
மலைகளின்மேல் தங்கிற்று.
5. பத்தாம் மாதம் மட்டும் ஜலம் வடிந்துகொண்டே
வந்தது; பத்தாம் மாதம் முதல் தேதியிலே மலைச்சிகரங்கள்
காணப்பட்டன.
6. நாற்பது நாள் சென்றபின், நோவா தான் பேழையில்
செய்திருந்த ஜன்னலைத் திறந்து,
7. ஒரு காகத்தை வெளியே விட்டான்; அது புறப்பட்டுப்
பூமியின்மேல் இருந்த ஜலம் வற்றிப்போகும்வரைக்கும் போகிறதும்
வருகிறதுமாய் இருந்தது.
8. பின்பு பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்றோ என்று அறியும்படி, ஒரு
புறாவைத் தன்னிடத்திலிருந்து வெளியே விட்டான்.
9. பூமியின்மீதெங்கும் ஜலம் இருந்தபடியால், அந்தப் புறா
தன் உள்ளங்கால் வைத்து இளைப்பாற இடம் காணாமல்,
திரும்பிப் பேழையிலே அவனிடத்தில் வந்தது; அவன் தன் கையை நீட்டி அதைப்
பிடித்துத் தன்னிடமாகப் பேழைக்குள் சேர்த்துக்கொண்டான்.
10. பின்னும் ஏழு நாள் பொறுத்து, மறுபடியும் புறாவைப்
பேழையிலிருந்து வெளியே விட்டான்.
11. அந்தப் புறா சாயங்காலத்தில் அவனிடத்தில் வந்து
சேர்ந்தது; இதோ, அது கொத்திக்கொண்டுவந்த ஒரு
ஒலிவமரத்தின் இலை அதின் வாயில் இருந்தது; அதினாலே நோவா
பூமியின்மேல் ஜலம் குறைந்து போயிற்று என்று அறிந்தான்.
12. பின்னும் ஏழு நாள் பொறுத்து, அவன் புறாவை
வெளியே விட்டான்; அது அவனிடத்திற்குத் திரும்ப வரவில்லை.
13. அவனுக்கு அறுநூற்றொரு வயதாகும் வருஷத்தில்,
முதல் மாதம் முதல் தேதியிலே பூமியின்மேல் இருந்த ஜலம்
வற்றிப்போயிற்று; நோவா பேழையின் மேல்தட்டை எடுத்துப்பார்த்தான்;
பூமியின்மேல் ஜலம் இல்லாதிருந்தது.
14. இரண்டாம் மாதம் இருபத்தேழாம் தேதியிலே பூமி
காய்ந்திருந்தது.
15. அப்பொழுது தேவன் நோவாவை நோக்கி:
16. நீயும், உன்னோடேகூட உன் மனைவியும், உன் குமாரரும், உன்
குமாரரின் மனைவிகளும் பேழையை விட்டுப் புறப்படுங்கள்.
17. உன்னிடத்தில் இருக்கிற சகலவித மாம்சஜந்துக்களாகிய
பறவைகளையும், மிருகங்களையும், பூமியின்மேல் ஊருகிற சகல
பிராணிகளையும் உன்னோடே வெளியே வரவிடு; அவைகள் பூமியிலே
திரளாய் வர்த்தித்து, பூமியின்மேல் பலுகிப் பெருகக்கடவது
என்றார்.
18. அப்பொழுது நோவாவும், அவன் குமாரரும், அவன்
மனைவியும், அவன் குமாரரின் மனைவிகளும் புறப்பட்டு
வந்தார்கள்.
19. பூமியின்மேல் நடமாடுகிற சகல மிருகங்களும், ஊருகிற சகல
பிராணிகளும், சகல பறவைகளும் ஜாதிஜாதியாய்ப்
பேழையிலிருந்து புறப்பட்டு வந்தன.
20. அப்பொழுது நோவா கர்த்தருக்கு ஒரு பலிபீடம் கட்டி,
சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும்
சிலவற்றைத் தெரிந்துகொண்டு, அவைகளைப்
பலிபீடத்தின்மேல் தகனபலிகளாகப் பலியிட்டான்.
21. சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது
கர்த்தர் : இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை;
மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன்
சிறுவயதுதொடங்கிப்
பொல்லாததாயிருக்கிறது; நான் இப்பொழுது
செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.
22. பூமியுள்ள நாளளவும் விதைப்பும் அறுப்பும், சீதளமும்
உஷ்ணமும், கோடைகாலமும் மாரிகாலமும், பகலும் இரவும்
ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்.
*
1. பின்பு தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் ஆசீர்வதித்து:
நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்.
2. உங்களைப்பற்றிய பயமும் அச்சமும் பூமியிலுள்ள சகல
மிருகங்களுக்கும், ஆகாயத்திலுள்ள சகல பறவைகளுக்கும்
உண்டாயிருக்கும்; பூமியிலே நடமாடுகிற யாவும், சமுத்திரத்தின்
மச்சங்கள் யாவும், உங்களுக்குக் கையளிக்கப்பட்டன.
3. நடமாடுகிற ஜீவஜந்துக்கள் யாவும், உங்களுக்கு
ஆகாரமாய் இருப்பதாக; பசும் பூண்டுகளை உங்களுக்குத்
தந்ததுபோல, அவைகள் எல்லாவற்றையும் உங்களுக்குத் தந்தேன்.
4. மாம்சத்தை அதின் உயிராகிய இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்.
5. உங்களுக்கு உயிராயிருக்கிற உங்கள் இரத்தத்திற்காகப்
பழிவாங்குவேன்; சகல ஜீவஜந்துக்களிடத்திலும் மனுஷனிடத்திலும்
பழிவாங்குவேன்; மனுஷனுடைய உயிருக்காக அவனவன்
சகோதரனிடத்தில் பழிவாங்குவேன்.
6. மனுஷன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டபடியால்,
மனுஷனுடைய இரத்தத்தை எவன் சிந்துகிறானோ, அவனுடைய இரத்தம்
மனுஷனாலே சிந்தப்படக்கடவது.
7. நீங்கள் பலுகிப் பெருகி, பூமியிலே திரளாய் வர்த்தித்து
விருத்தியாகுங்கள் என்றார்.
8. பின்னும் தேவன் நோவாவையும், அவன் குமாரரையும் நோக்கி:
9. நான் உங்களோடும், உங்களுக்குப் பின்வரும் உங்கள்
சந்ததியோடும்,
10. உங்களோடே பேழையிலிருந்து புறப்பட்ட சகல ஜீவஜந்துக்கள்முதல்
இனிப் பூமியில் உண்டாகப்போகிற சகல ஜீவஜந்துக்கள் பரியந்தம்,
பறவைகளோடும், நாட்டுமிருகங்களோடும், உங்களிடத்தில் இருக்கிற
பூமியிலுள்ள சகல காட்டுமிருகங்களோடும் என் உடன்படிக்கையை
ஏற்படுத்துகிறேன்.
11. இனி மாம்சமானவைகளெல்லாம்
ஜலப்பிரளயத்தினால் சங்கரிக்கப்படுவதில்லையென்றும்,
பூமியை அழிக்க இனி ஜலப்பிரளயம்
உண்டாவதில்லையென்றும், உங்களோடே என் உடன்படிக்கையை
ஏற்படுத்துகிறேன் என்றார்.
12. அன்றியும் தேவன்: எனக்கும் உங்களுக்கும், உங்களிடத்தில்
இருக்கும் சகல ஜீவஜந்துக்களுக்கும், நித்திய
தலைமுறைகளுக்கென்று நான் செய்கிற உடன்படிக்கையின்
அடையாளமாக:
13. நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும்
உண்டான உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்.
14. நான் பூமிக்கு மேலாய் மேகத்தை வருவிக்கும்போது, அந்த வில்
மேகத்தில் தோன்றும்.
15. அப்பொழுது எல்லா மாம்சஜீவன்களையும் அழிக்க
இனி ஜலமானது பிரளயமாய்ப் பெருகாதபடிக்கு எனக்கும்
உங்களுக்கும் மாம்சமான சகல ஜீவஜந்துக்களுக்கும்
உண்டான என் உடன்படிக்கையை நினைவுகூருவேன்.
16. அந்த வில் மேகத்தில் தோன்றும்போது, தேவனுக்கும் பூமியின்மேலுள்ள
சகலவித மாம்சஜீவன்களுக்கும் உண்டான நித்திய
உடன்படிக்கையை நான் நினைவுகூரும்படிக்கு அதை நோக்கிப்பார்ப்பேன்.
17. இது எனக்கும், பூமியின்மேலுள்ள மாம்சமான யாவுக்கும்,
நான் ஏற்படுத்தின உடன்படிக்கையின் அடையாளம் என்று
நோவாவோடே சொன்னார்.
18. பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம்
யாப்பேத் என்பவர்களே. காம் கானானுக்குத் தகப்பன்.
19. இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே
பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.
20. நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான்.
21. அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு,
தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்.
22. அப்பொழுது கானானுக்குத் தகப்பனாகிய காம்
தன் தகப்பனுடைய நிர்வாணத்தைக் கண்டு, வெளியில் இருந்த
தன் சகோதரர் இருவருக்கும் அறிவித்தான்.
23. அப்பொழுது சேமும் யாப்பேத்தும் ஒரு வஸ்திரத்தை
எடுத்துத் தங்கள் இருவருடைய தோள்மேலும் போட்டுக்கொண்டு,
பின்னிட்டு வந்து, தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தை
மூடினார்கள்; அவர்கள் எதிர்முகமாய்ப் போகாதபடியினால்,
தங்கள் தகப்பனுடைய நிர்வாணத்தைக் காணவில்லை.
24. நோவா திராட்சரசத்தின் வெறி தெளிந்து விழித்தபோது,
தன் இளைய குமாரன் தனக்குச் செய்ததை அறிந்து:
25. கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில்
அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான் என்றான்.
26. சேமுடைய தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக;
கானான் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
27. யாப்பேத்தை தேவன் விருத்தியாக்குவார்; அவன் சேமுடைய
கூடாரங்களில் குடியிருப்பான்; கானான் அவனுக்கு
அடிமையாயிருப்பான் என்றான்.
28. ஜலப்பிரளயத்துக்குப்பின்பு நோவா முந்நூற்று ஐம்பது வருஷம்
உயிரோடிருந்தான்.
29. நோவாவின் நாட்களெல்லாம் தொளாயிரத்து
ஐம்பது வருஷம்; அவன் மரித்தான்.
*
1. நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின்
வம்சவரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக்
குமாரர் பிறந்தார்கள்.
2. யாப்பேத்தின் குமாரர், கோமர், மாகோகு, மாதாய்,
யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
3. கோமரின் குமாரர், அஸ்கினாஸ், ரீப்பாத்து,
தொகர்மா என்பவர்கள்.
4. யாவானின் குமாரர், எலீசா, தர்ஷீஸ், கித்தீம்,
தொதானீம் என்பவர்கள்.
5. இவர்களால் ஜாதிகளுடைய தீவுகள், அவனவன்
பாஷையின்படியேயும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும்,
ஜாதியின்படியேயும், வேறுவேறு தேசங்களாய்ப் பகுக்கப்பட்டன.
6. காமுடைய குமாரர், கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான்
என்பவர்கள்.
7. கூஷுடைய குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா,
சப்திகா என்பவர்கள். ராமாவின் குமாரர், சேபா, திதான்
என்பவர்கள்.
8. கூஷ் நிம்ரோதைப் பெற்றான்; இவன் பூமியிலே
பராக்கிரமசாலியானான்.
9. இவன் கர்த்தருக்கு முன்பாகப் பலத்த
வேட்டைக்காரனாயிருந்தான்; ஆகையால் கர்த்தருக்கு
முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப் போல என்னும்
வழக்கச்சொல் உண்டாயிற்று.
10. சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே
என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு ஆதி
ஸ்தானங்கள்.
11. அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும்,
ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
12. நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும்
கட்டினான்; இது பெரிய பட்டணம்.
13. மிஸ்ராயீம், லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும்,
நப்தூகீமையும்,
14. பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய
கஸ்லூகீமையும், கப்தொரீமையும் பெற்றான்.
15. கானான் தன் மூத்த மகனாகிய சீதோனையும், கேத்தையும்,
16. எபூசியரையும், எமோரியரையும், கிர்காசியரையும்,
17. ஏவியரையும், அர்கீயரையும், சீநியரையும்,
18. அர்வாதியரையும், செமாரியரையும், காமாத்தியரையும்
பெற்றான்; பின்பு கானானியரின் வம்சத்தார் எங்கும்
பரவினார்கள்.
19. கானானியரின் எல்லை, சீதோன்முதல் கேரார் வழியாய்க்
காசாமட்டுக்கும், அது முதல் சோதோம், கொமோரா, அத்மா,
செபோயிம் வழியாய் லாசாமட்டுக்கும் இருந்தது.
20. இவர்கள் தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள
தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும்
காமுடைய சந்ததியார்.
21. சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய
சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய
யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.
22. சேமுடைய குமாரர், ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம்
என்பவர்கள்.
23. ஆராமுடைய குமாரர், ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ்
என்பவர்கள்.
24. அர்பக்சாத் சாலாவைப் பெற்றான்; சாலா ஏபேரைப்
பெற்றான்.
25. ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு
என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி
பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
26. யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும்,
அசர்மாவேத்தையும், யேராகையும்,
27. அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
28. ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
29. ஒப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றான்;
இவர்கள் அனைவரும் யொக்தானுடைய குமாரர்.
30. இவர்களுடைய குடியிருப்பு மேசா துவக்கி, கிழக்கேயுள்ள
மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிமட்டும் இருந்தது.
31. இவர்களே தங்கள் தேசங்களிலும், தங்கள் ஜாதிகளிலுமுள்ள
தங்கள் வம்சங்களின்படியேயும், தங்கள் பாஷைகளின்படியேயும்
சேமுடைய சந்ததியார்.
32. தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே
நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே;
ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள்
பிரிந்தன.
*
*
1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
2. பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது;
ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல்
அசைவாடிக்கொண்டிருந்தார்.
3. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார்,
வெளிச்சம் உண்டாயிற்று.
4. வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்;
வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப்
பிரித்தார்.
5. தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு
இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி
முதலாம் நாள் ஆயிற்று.
6. பின்பு தேவன்: ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு
உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப்
பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.
7. தேவன் ஆகாயவிரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே
இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற
ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.
8. தேவன் ஆகாயவிரிவுக்கு வானம் என்று பேரிட்டார்;
சாயங்காலமும் விடியற்காலமுமாகி இரண்டாம் நாள்
ஆயிற்று.
9. பின்பு தேவன்: வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில்
சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்;
அது அப்படியே ஆயிற்று.
10. தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச்
சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
11. அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப்
பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள்
விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே
கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது
என்றார்; அது அப்படியே ஆயிற்று.
12. பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே
விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும் தங்கள் தங்கள்
ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக்
கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது
நல்லது என்று கண்டார்.
13. சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள்
ஆயிற்று.
14. பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம்
உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே
சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள்
அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும்
வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
15. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற
ஆகாயவிரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது
அப்படியே ஆயிற்று.
16. தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய
சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும்,
நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
17. அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
18. பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும்
வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற
ஆகாயவிரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
19. சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள்
ஆயிற்று.
20. பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம்
என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது
திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்.
21. தேவன், மகா மச்சங்களையும், ஜலத்தில் தங்கள் தங்கள்
ஜாதியின்படியே திரளாய் ஜநிப்பிக்கப்பட்ட சகலவித நீர் வாழும்
ஜந்துக்களையும், சிறகுள்ள ஜாதிஜாதியான சகலவிதப்
பட்சிகளையும் சிருஷ்டித்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி,
சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் என்றும், பறவைகள் பூமியில்
பெருகக்கடவது என்றும் சொன்னார்.
23. சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஐந்தாம் நாள்
ஆயிற்று.
24. பின்பு தேவன்: பூமியானது ஜாதிஜாதியான
ஜீவஜந்துக்களாகிய நாட்டுமிருகங்களையும், ஊரும்
பிராணிகளையும், காட்டுமிருகங்களையும் ஜாதிஜாதியாகப்
பிறப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும்,
ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும்
பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது
நல்லது என்று கண்டார்.
26. பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும்
மனுஷனை உண்டாக்குவோமாக; அவர்கள் சமுத்திரத்தின்
மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருகஜீவன்களையும்,
பூமியனைத்தையும், பூமியின்மேல் ஊரும் சகலப் பிராணிகளையும்
ஆளக்கடவர்கள் என்றார்.
27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்,
அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும்
பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.
28. பின்பு தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை
நிரப்பி, அதைக் கீழ்ப்படுத்தி, சமுத்திரத்தின் மச்சங்களையும்
ஆகாயத்துப் பறவைகளையும், பூமியின்மேல் நடமாடுகிற சகல
ஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்று
சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.
29. பின்னும் தேவன்: இதோ, பூமியின்மேல் எங்கும் விதைதரும் சகலவிதப்
பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித
விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள்
உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது;
30. பூமியிலுள்ள சகல மிருகஜீவன்களுக்கும், ஆகாயத்திலுள்ள
சகல பறவைகளுக்கும், பூமியின்மேல் ஊரும் பிராணிகள்
எல்லாவற்றிற்கும் பசுமையான சகல பூண்டுகளையும்
ஆகாரமாகக் கொடுத்தேன் என்றார்; அது அப்படியே
ஆயிற்று.
31. அப்பொழுது தேவன் தாம் உண்டாக்கின
எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது;
சாயங்காலமும் விடியற்காலமுமாகி ஆறாம் நாள்
ஆயிற்று.
*
1. இவ்விதமாக வானமும் பூமியும், அவைகளின் சர்வசேனையும்
உண்டாக்கப்பட்டுத் தீர்ந்தன.
2. தேவன் தாம் செய்த தம்முடைய கிரியையை ஏழாம் நாளிலே
நிறைவேற்றி, தாம் உண்டாக்கின தம்முடைய
கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே
ஓய்ந்திருந்தார்.
3. தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய
கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே
ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப்
பரிசுத்தமாக்கினார்.
4. தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின
நாளிலே, வானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.
5. நிலத்தினுடைய சகலவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும்
உண்டாகவில்லை, நிலத்தினுடைய சகலவிதப் பூண்டுகளும் இன்னும்
முளைக்கவில்லை; ஏனெனில் தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல்
இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை; நிலத்தைப் பண்படுத்த
மனுஷனும் இருந்ததில்லை.
6. அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி,
பூமியையெல்லாம் நனைத்தது.
7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே
உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்,
மனுஷன் ஜீவாத்துமாவானான்.
8. தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை
உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்.
9. தேவனாகிய கர்த்தர் , பார்வைக்கு அழகும் புசிப்புக்கு
நலமுமான சகலவித விருட்சங்களையும், தோட்டத்தின் நடுவிலே
ஜீவவிருட்சத்தையும், நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தையும்
பூமியிலிருந்து முளைக்கப்பண்ணினார்.
10. தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி,
அங்கேயிருந்து பிரிந்து நாலு பெரிய ஆறுகளாயிற்று.
11. முதலாம் ஆற்றுக்குப் பைசோன் என்று பேர், அது ஆவிலா தேசம்
முழுவதையும் சுற்றி ஓடும்; அவ்விடத்திலே பொன் விளையும்.
12. அந்தத் தேசத்தின் பொன் நல்லது; அவ்விடத்திலே
பிதோலாகும், கோமேதகக் கல்லும் உண்டு.
13. இரண்டாம் ஆற்றுக்குக் கீகோன் என்று பேர், அது எத்தியோப்பியா
தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
14. மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பேர், அது
அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நாலாம் ஆற்றுக்கு ஐபிராத்து
என்று பேர்.
15. தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில்
அழைத்துக்கொண்டு வந்து, அதைப் பண்படுத்தவும்
காக்கவும் வைத்தார்.
16. தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல
விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.
17. ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப்
புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்
என்று கட்டளையிட்டார்.
18. பின்பு தேவனாகிய கர்த்தர் : மனுஷன் தனிமையாயிருப்பது
நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்.
19. தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும்,
ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே
உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று
பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்;
அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ
அதுவே அதற்குப் பேராயிற்று.
20. அப்படியே ஆதாம் சகலவித நாட்டுமிருகங்களுக்கும்,
ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும்
பேரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
21. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கு
அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்;
அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச்
சதையினால் அடைத்தார்.
22. தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை
மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில்
கொண்டுவந்தார்.
23. அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும்,
என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள்
மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்
என்றான்.
24. இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு,
தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே
மாம்சமாயிருப்பார்கள்.
25. ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும்
நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
*
1. தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு
ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது.
அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின்
கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது
உண்டோ என்றது.
2. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்திலுள்ள
விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்;
3. ஆனாலும், தோட்டத்தின் நடுவில் இருக்கிற விருட்சத்தின் கனியைக்
குறித்து, தேவன்: நீங்கள் சாகாதபடிக்கு அதைப் புசிக்கவும் அதைத்
தொடவும் வேண்டாம் என்று சொன்னார்
என்றாள்.
4. அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே
சாவதில்லை;
5. நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும்
என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள்
என்றும் தேவன் அறிவார் என்றது.
6. அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு
நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு
இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு,
அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும்
கொடுத்தாள்; அவனும் புசித்தான்.
7. அப்பொழுது அவர்கள் இருவருடைய கண்களும்
திறக்கப்பட்டது; அவர்கள் தாங்கள் நிர்வாணிகள் என்று
அறிந்து, அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை
உண்டுபண்ணினார்கள்.
8. பகலில் குளிர்ச்சியான வேளையிலே தோட்டத்தில் உலாவுகிற
தேவனாகிய கர்த்தருடைய சத்தத்தை அவர்கள் கேட்டார்கள்.
அப்பொழுது ஆதாமும் அவன் மனைவியும் தேவனாகிய
கர்த்தருடைய சந்நிதிக்கு விலகி, தோட்டத்தின் விருட்சங்களுக்குள்ளே
ஒளித்துக்கொண்டார்கள்.
9. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு:
நீ எங்கே இருக்கிறாய் என்றார்.
10. அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு,
நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து,
ஒளித்துக்கொண்டேன் என்றான்.
11. அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு
அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு
விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.
12. அதற்கு ஆதாம்: என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த
ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக்
கொடுத்தாள், நான் புசித்தேன் என்றான்.
13. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ
இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள்:
சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்.
14. அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப்
பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல
நாட்டுமிருகங்களிலும் சகல காட்டுமிருகங்களிலும்
சபிக்கப்பட்டிருப்பாய், நீ உன் வயிற்றினால் நகர்ந்து,
உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்;
15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை
உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர்
குதிங்காலை நசுக்குவாய் என்றார்.
16. அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை
மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை
பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன்
உன்னை ஆண்டுகொள்ளுவான் என்றார்.
17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச்
செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான்
உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி
உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும்
நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய்.
18. அது உனக்கு முள்ளும் குருக்கும் முளைப்பிக்கும்; வெளியின்
பயிர்வகைகளைப் புசிப்பாய்.
19. நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும்
உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ
மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
20. ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்;
ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம்
தாயானவள்.
21. தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல்
உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்.
22. பின்பு தேவனாகிய கர்த்தர் : இதோ, மனுஷன் நன்மை தீமை
அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்;
இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின்
கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச்
செய்யவேண்டும் என்று,
23. அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய
கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
24. அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக்
காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும்,
வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும்
வைத்தார்.
*
1. ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள்
கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு
மனுஷனைப் பெற்றேன் என்றாள்.
2. பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்;
ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப்
பயிரிடுகிறவனானான்.
3. சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக்
கர்த்தருக்கு க் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
4. ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில்
கொழுமையானவைகளிலும் சிலவற்றைக்
கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும்
கர்த்தர் அங்கிகரித்தார்.
5. காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை.
அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி,
அவன் முகநாடி வேறுபட்டது.
6. அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன்
எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?
7. நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை
செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்;
அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை
ஆண்டுகொள்ளுவாய் என்றார்.
8. காயீன் தன் சகோதரனாகிய ஆபேலோடே பேசினான்; அவர்கள்
வயல் வெளியில் இருக்கும் சமயத்தில், காயீன் தன்
சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாய் எழும்பி, அவனைக்
கொலைசெய்தான்.
9. கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே
என்றார்; அதற்கு அவன்: நான் அறியேன்; என் சகோதரனுக்கு
நான் காவலாளியோ என்றான்.
10. அதற்கு அவர்: என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய
இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
11. இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தத்தை உன் கையிலே
வாங்கிக்கொள்ளத் தன் வாயைத் திறந்த இந்தப்
பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
12. நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக்
கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய்
என்றார்.
13. அப்பொழுது காயீன் கர்த்தரை நோக்கி: எனக்கு இட்ட
தண்டனை என்னால் சகிக்கமுடியாது.
14. இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான்
உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று
அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும்
என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
15. அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: காயீனைக்
கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று
சொல்லி, காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக்
கொன்றுபோடாதபடிக்குக் கர்த்தர் அவன்மேல் ஒரு
அடையாளத்தைப் போட்டார்.
16. அப்படியே காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு,
ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
17. காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி,
ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு
பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய
ஏனோக்குடைய பேரை இட்டான்.
18. ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப்
பெற்றான்; மெகுயவேல் மெத்தூசவேலைப்
பெற்றான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.
19. லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்;
ஒருத்திக்கு ஆதாள் என்று பேர், மற்றொருத்திக்குச்
சில்லாள் என்று பேர்.
20. ஆதாள் யாபாலைப் பெற்றாள்; அவன்
கூடாரங்களில் வாசம்பண்ணுகிறவர்களுக்கும் மந்தை
மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
21. அவன் சகோதரனுடைய பேர் யூபால்; அவன் கின்னரக்காரர்
நாகசுரக்காரர் யாவருக்கும் தகப்பனானான்.
22. சில்லாளும் தூபால் காயீனைப் பெற்றாள்; அவன்
பித்தளை இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்
யாவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி
நாமாள்.
23. லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே, சில்லாளே,
நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே,
என் சத்தத்துக்குச் செவிகொடுங்கள்; எனக்குக்
காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்; எனக்குத்
தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்;
24. காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக
எழுபத்தேழு பழி சுமரும் என்றான்.
25. பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு
குமாரனைப் பெற்று: காயீன் கொலைசெய்த
ஆபேலுக்குப் பதிலாக, தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக்
கொடுத்தார் என்று சொல்லி, அவனுக்கு சேத்
என்று பேரிட்டாள்.
26. சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று
பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத்
தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.
*
1. ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த
நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.
2. அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை
ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு
மனுஷர் என்று பேரிட்டார்.
3. ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன்
ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று
பேரிட்டான்.
4. ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
5. ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம்
தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.
6. சேத் நூற்றைந்து வயதானபோது, ஏனோசைப் பெற்றான்.
7. சேத் ஏனோசைப் பெற்றபின், எண்ணூற்றேழு வருஷம் உயிரோடிருந்து,
குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
8. சேத்துடைய நாளெல்லாம் தொளாயிரத்துப்
பன்னிரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
9. ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப்
பெற்றான்.
10. ஏனோஸ் கேனானைப் பெற்றபின், எண்ணூற்றுப் பதினைந்து
வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
11. ஏனோசுடைய நாளெல்லாம் தொளாயிரத்து ஐந்து
வருஷம்; அவன் மரித்தான்.
12. கேனான் எழுபது வயதானபோது, மகலாலெயேலைப்
பெற்றான்.
13. கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், எண்ணூற்று
நாற்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
14. கேனானுடைய நாளெல்லாம் தொளாயிரத்துப்
பத்து வருஷம்; அவன் மரித்தான்.
15. மகலாலெயேல் அறுபத்தைந்து வயதானபோது, யாரேதைப்
பெற்றான்.
16. மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், எண்ணூற்று
முப்பது வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும்
பெற்றான்.
17. மகலாலெயேலுடைய நாளெல்லாம் எண்ணூற்றுத்
தொண்ணூற்று ஐந்து வருஷம்; அவன் மரித்தான்.
18. யாரேத் நூற்று அறுபத்திரண்டு வயதானபோது, ஏனோக்கைப்
பெற்றான்.
19. யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், எண்ணூறு வருஷம்
உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.
20. யாரேதுடைய நாளெல்லாம் தொளாயிரத்து
அறுபத்திரண்டு வருஷம்; அவன் மரித்தான்.
21. ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது, மெத்தூசலாவைப்
பெற்றான்.
22. ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், முந்நூறு வருஷம்
தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருந்து, குமாரரையும்
குமாரத்திகளையும் பெற்றான்.
23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து
வருஷம்.
24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில்,
காணப்படாமற்போனான்; தேவன் அவனை
எடுத்துக்கொண்டார்.
25. மெத்தூசலா நூற்றெண்பத்தேழு வயதானபோது,
லாமேக்கைப் பெற்றான்.
26. மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், எழுநூற்று
எண்பத்திரண்டு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும்
குமாரத்திகளையும் பெற்றான்.
27. மெத்தூசலாவுடைய நாளெல்லாம்
தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்;
அவன் மரித்தான்.
28. லாமேக்கு நூற்றெண்பத்திரண்டு வயதானபோது, ஒரு
குமாரனைப் பெற்று,
29. கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும்,
நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்
என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
30. லாமேக்கு நோவாவைப் பெற்றபின், ஐந்நூற்றுத்
தொண்ணூற்று ஐந்து வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும்
குமாரத்திகளையும் பெற்றான்.
31. லாமேக்குடைய நாளெல்லாம் எழுநூற்று எழுபத்தேழு
வருஷம்; அவன் மரித்தான்.
32. நோவா ஐந்நூறு வயதானபோது, சேம் காம் யாப்பேத்
என்பவர்களைப் பெற்றான்.
*
*
1. தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய
சாலொமோனின் நீதிமொழிகள்:
2. இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை
உணர்ந்து,
3. விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய
உபதேசத்தை அடையலாம்.
4. இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும்
விவேகத்தையும் கொடுக்கும்.
5. புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி
நல்லாலோசனைகளை அடைந்து;
6. நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின்
வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும்
அறிந்துகொள்வான்.
7. கர்த்தருக்கு ப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர்
ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
8. என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின்
போதகத்தைத் தள்ளாதே.
9. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன்
கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
10. என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ
சம்மதியாதே.
11. எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து,
குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி
ஒளித்திருப்போம்;
12. பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே
விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல்
அவர்களை முழுமையும் விழுங்குவோம்;
13. விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்;
கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை
நிரப்புவோம்.
14. எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை
இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்;
15. என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை
அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
16. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத்
தீவிரிக்கிறது.
17. எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு
முன்பாக வலையை விரிப்பது விருதா.
18. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள்
பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்.
19. பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது
தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
20. ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில்
சத்தமிடுகிறது.
21. அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும்,
ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன்
வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:
22. பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள்
நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை
வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என்
ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத்
தெரிவிப்பேன்.
24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான்
என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என்
கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26. ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து,
நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
27. நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து
சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும்
உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
28. அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்;
நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள்
அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக்
காணமாட்டார்கள்.
29. அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்கு ப்
பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
30. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என்
கடிந்துகொள்ளுதலையெல்லாம்
அசட்டைபண்ணினார்கள்.
31. ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்;
தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
32. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின்
நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன்
விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல்
அமைதியாயிருப்பான்.
*
1. என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்
இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
2. நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை
உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
3. ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
4. அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல்
தேடுவாயாகில்,
5. அப்பொழுது கர்த்தருக்கு ப் பயப்படுதல்
இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக்
கண்டடைவாய்.
6. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும்
புத்தியும் வரும்.
7. அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை
வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர்
கேடகமாயிருக்கிறார்.
8. அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய
பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
9. அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும்,
சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.
10. ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன்
ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
11. நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப்
பாதுகாக்கும்.
12. அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு
பேசுகிற மனுஷனுக்கும்,
13. அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,
14. தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில்
களிகூருகிறவர்களுக்கும்,
15. மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும்
நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
16. தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய
உடன்படிக்கையை மறந்து,
17. இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய
பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.
18. அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள்
மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
19. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை,
ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
20. ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின்
பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.
21. செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்;
உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
22. துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள்
அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.
*
1. என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என்
கட்டளைகளைக் காக்கக்கடவது.
2. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும்,
சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
3. கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ
அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய
பலகையில் எழுதிக்கொள்.
4. அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும்
தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
5. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும்
கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
6. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;
அப்பொழுது அவர் உன் பாதைகளைச்
செவ்வைப்படுத்துவார்.
7. நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்கு ப்
பயந்து, தீமையை விட்டு விலகு.
8. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு
ஊனுமாகும்.
9. உன் பொருளாலும், உன் எல்லா விளைவின்
முதற்பலனாலும் கர்த்தரை க் கனம்பண்ணு.
10. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய்
நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
11. என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே,
அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
12. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும்
எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
13. ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற
மனுஷனும் பாக்கியவான்கள்.
14. அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின்
ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
15. முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ
இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
16. அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில்
செல்வமும் கனமும் இருக்கிறது.
17. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின்
பாதைகளெல்லாம் சமாதானம்.
18. அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப்
பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
19. கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி,
புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
20. அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும்
பனியைப்பெய்கிறது.
21. என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப்
பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும்
நல்லாலோசனையையும் காத்துக்கொள்.
22. அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு
அலங்காரமுமாயிருக்கும்.
23. அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய்,
உன் கால் இடறாது.
24. நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ
படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
25. சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ
அஞ்சவேண்டாம்.
26. கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால்
சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
27. நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை
செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
28. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை
நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று
சொல்லாதே.
29. அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன்
அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
30. ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி
அவனோடே வழக்காடாதே.
31. கொடுமையுள்ளவன்மேல் பொறாமை
கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும்
தெரிந்துகொள்ளாதே.
32. மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்;
நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
33. துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது,
நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
34. இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ
கிருபையளிக்கிறார்.
35. ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ
கனவீனத்தை அடைவார்கள்.
*
1. பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி
கவனியுங்கள்.
2. நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை
விடாதிருங்கள்.
3. நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என்
தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
4. அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம்
என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என்
கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
5. ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின்
வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
6. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல்
பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
7. ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச்
சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
8. நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத்
தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
9. அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக்
கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
10. என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்;
அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.
11. ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்;
செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
12. நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண்
உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
13. புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை
விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு
ஜீவன்.
14. துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில்
நடவாதே.
15. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு
விலகிக் கடந்துபோ.
16. பொல்லாப்புச் செய்தாலொழிய
அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும்
விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
17. அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து,
கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
18. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப்
பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.
19. துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள்
இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.
20. என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு
உன் செவியைச் சாய்.
21. அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை
உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.
22. அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும்,
அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
23. எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக்
காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
24. வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின்
மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
25. உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள்
உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
26. உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன்
வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
27. வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத்
தீமைக்கு விலக்குவாயாக.
*
1. என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன்
செவியைச் சாய்;
2. அப்பொழுது நீ விவேகத்தைப்பேணிக்கொள்வாய்,
உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
3. பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய்
எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
4. அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும்
கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.
5. அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள்
பாதாளத்தைப் பற்றிப்போகும்.
6. நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு,
அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை
அறியமுடியாது.
7. ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச்
செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு
நீங்காதிருங்கள்.
8. உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின்
வாசலைக்கிட்டிச் சேராதே.
9. சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின்
காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
10. அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்;
உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
11. முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ
துக்கித்து:
12. ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே,
கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!
13. என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு
உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும்
போனேனே!
14. சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய
எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
15. உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற
ஜலத்தையும் பானம்பண்ணு.
16. உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள்
வீதிகளிலும் பாய்வதாக.
17. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே
உரியவைகளாயிருப்பதாக.
18. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்
இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
19. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான
வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே
எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக;
அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும்
மயங்கியிருப்பாயாக.
20. என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய
ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
21. மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக
இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர்
சீர்தூக்கிப்பார்க்கிறார்.
22. துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே
பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால்
கட்டப்படுவான்.
23. அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின்
மிகுதியினால் மயங்கிப்போவான்.
*