*
1. தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய
சாலொமோனின் நீதிமொழிகள்:
2. இவைகளால் ஞானத்தையும் போதகத்தையும் அறிந்து, புத்திமதிகளை
உணர்ந்து,
3. விவேகம், நீதி, நியாயம், நிதானம் என்பவைகளைப்பற்றிய
உபதேசத்தை அடையலாம்.
4. இவைகள் பேதைகளுக்கு வினாவையும், வாலிபருக்கு அறிவையும்
விவேகத்தையும் கொடுக்கும்.
5. புத்திமான் இவைகளைக் கேட்டு, அறிவில் தேறுவான்; விவேகி
நல்லாலோசனைகளை அடைந்து;
6. நீதிமொழியையும், அதின் அர்த்தத்தையும், ஞானிகளின்
வாக்கியங்களையும், அவர்கள் உரைத்த புதைபொருள்களையும்
அறிந்துகொள்வான்.
7. கர்த்தருக்கு ப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர்
ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
8. என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின்
போதகத்தைத் தள்ளாதே.
9. அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன்
கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
10. என் மகனே, பாவிகள் உனக்கு நயங்காட்டினாலும் நீ
சம்மதியாதே.
11. எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து,
குற்றமற்றிருக்கிறவர்களை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி
ஒளித்திருப்போம்;
12. பாதாளம் விழுங்குவதுபோல் நாம் அவர்களை உயிரோடே
விழுங்குவோம்; குழியில் இறங்குகிறவர்கள் விழுங்கப்படுவதுபோல்
அவர்களை முழுமையும் விழுங்குவோம்;
13. விலையுயர்ந்த சகலவிதப் பொருள்களையும் கண்டடைவோம்;
கொள்ளைப் பொருளினால் நம்முடைய வீடுகளை
நிரப்புவோம்.
14. எங்களோடே பங்காளியாயிரு; நம்மெல்லாருக்கும் ஒரே பை
இருக்குமென்று அவர்கள் சொல்வார்களாகில்;
15. என் மகனே, நீ அவர்களோடே வழிநடவாமல், உன் காலை
அவர்கள் பாதைக்கு விலக்குவாயாக.
16. அவர்கள் கால்கள் தீங்குசெய்ய ஓடி, இரத்தஞ்சிந்தத்
தீவிரிக்கிறது.
17. எவ்வகையான பட்சியானாலும் சரி, அதின் கண்களுக்கு
முன்பாக வலையை விரிப்பது விருதா.
18. இவர்களோ தங்கள் இரத்தத்திற்கே பதிவிருக்கிறார்கள், தங்கள்
பிராணனுக்கே ஒளி வைத்திருக்கிறார்கள்.
19. பொருளாசையுள்ள எல்லாருடைய வழியும் இதுவே; இது
தன்னையுடையவர்களின் உயிரை வாங்கும்.
20. ஞானமானது வெளியே நின்று கூப்பிடுகிறது, வீதிகளில்
சத்தமிடுகிறது.
21. அது சந்தடியுள்ள தெருக்களின் சந்திலும்,
ஒலிமுகவாசலிலும் நின்று கூப்பிட்டு, பட்டணத்தில் தன்
வார்த்தைகளை வசனித்துச் சொல்லுகிறது:
22. பேதைகளே, நீங்கள் பேதைமையை விரும்புவதும், நிந்தனைக்காரரே, நீங்கள்
நிந்தனையில் பிரியப்படுவதும், மதியீனரே, நீங்கள் ஞானத்தை
வெறுப்பதும், எதுவரைக்கும் இருக்கும்.
23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என்
ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத்
தெரிவிப்பேன்.
24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான்
என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
25. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என்
கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
26. ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து,
நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
27. நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து
சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும்
உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
28. அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்;
நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள்
அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக்
காணமாட்டார்கள்.
29. அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்கு ப்
பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
30. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என்
கடிந்துகொள்ளுதலையெல்லாம்
அசட்டைபண்ணினார்கள்.
31. ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்;
தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
32. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின்
நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன்
விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல்
அமைதியாயிருப்பான்.
*
1. என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன்
இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
2. நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை
உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
3. ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
4. அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல்
தேடுவாயாகில்,
5. அப்பொழுது கர்த்தருக்கு ப் பயப்படுதல்
இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக்
கண்டடைவாய்.
6. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும்
புத்தியும் வரும்.
7. அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை
வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர்
கேடகமாயிருக்கிறார்.
8. அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய
பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
9. அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும்,
சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்.
10. ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன்
ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது,
11. நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், புத்தி உன்னைப்
பாதுகாக்கும்.
12. அதினால் நீ துன்மார்க்கனுடைய வழிக்கும், மாறுபாடு
பேசுகிற மனுஷனுக்கும்,
13. அந்தகார வழிகளில் நடக்க நீதிநெறிகளை விட்டு,
14. தீமைசெய்ய மகிழ்ந்து, துன்மார்க்கருடைய மாறுபாடுகளில்
களிகூருகிறவர்களுக்கும்,
15. மாறுபாடான பாதைகளிலும் கோணலான வழிகளிலும்
நடக்கிறவர்களுக்கும் நீ தப்புவிக்கப்படுவாய்.
16. தன் இளவயதின் நாயகனை விட்டு, தன் தேவனுடைய
உடன்படிக்கையை மறந்து,
17. இச்சகமான வார்த்தைகளைப் பேசும் அந்நிய
பெண்ணாகிய பரஸ்திரீக்கும் தப்புவிக்கப்படுவாய்.
18. அவளுடைய வீடு மரணத்துக்கும், அவளுடைய பாதைகள்
மரித்தோரிடத்திற்கும் சாய்கிறது.
19. அவளிடத்தில் போகிறவர்களில் ஒருவரும் திரும்புகிறதில்லை,
ஜீவபாதைகளில் வந்து சேருகிறதுமில்லை.
20. ஆதலால் நீ நல்லவர்களின் வழியிலே நடந்து, நீதிமான்களின்
பாதைகளைக் காத்துக்கொள்வாயாக.
21. செவ்வையானவர்கள் பூமியிலே வாசம்பண்ணுவார்கள்;
உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள்.
22. துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டுபோவார்கள்; துரோகிகள்
அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.
*
1. என் மகனே, என் போதகத்தை மறவாதே; உன் இருதயம் என்
கட்டளைகளைக் காக்கக்கடவது.
2. அவைகள் உனக்கு நீடித்த நாட்களையும், தீர்க்காயுசையும்,
சமாதானத்தையும் பெருகப்பண்ணும்.
3. கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ
அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய
பலகையில் எழுதிக்கொள்.
4. அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும்
தயையும் நற்புத்தியும் பெறுவாய்.
5. உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும்
கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,
6. உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;
அப்பொழுது அவர் உன் பாதைகளைச்
செவ்வைப்படுத்துவார்.
7. நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்கு ப்
பயந்து, தீமையை விட்டு விலகு.
8. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு
ஊனுமாகும்.
9. உன் பொருளாலும், உன் எல்லா விளைவின்
முதற்பலனாலும் கர்த்தரை க் கனம்பண்ணு.
10. அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய்
நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்.
11. என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே,
அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.
12. தகப்பன் தான் நேசிக்கிற புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல, கர்த்தரும்
எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனைச் சிட்சிக்கிறார்.
13. ஞானத்தைக் கண்டடைகிற மனுஷனும், புத்தியைச் சம்பாதிக்கிற
மனுஷனும் பாக்கியவான்கள்.
14. அதின் வர்த்தகம் வெள்ளி வர்த்தகத்திலும், அதின்
ஆதாயம் பசும்பொன்னிலும் உத்தமமானது.
15. முத்துக்களைப்பார்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ
இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
16. அதின் வலது கையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில்
செல்வமும் கனமும் இருக்கிறது.
17. அதின் வழிகள் இனிதான வழிகள், அதின்
பாதைகளெல்லாம் சமாதானம்.
18. அது தன்னை அடைந்தவர்களுக்கு ஜீவவிருட்சம், அதைப்
பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
19. கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி,
புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
20. அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும்
பனியைப்பெய்கிறது.
21. என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப்
பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும்
நல்லாலோசனையையும் காத்துக்கொள்.
22. அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு
அலங்காரமுமாயிருக்கும்.
23. அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய்,
உன் கால் இடறாது.
24. நீ படுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ
படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
25. சடிதியான திகிலும், துஷ்டர்களின் பாழ்க்கடிப்பும் வரும்போது நீ
அஞ்சவேண்டாம்.
26. கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால்
சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
27. நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதை
செய்யத்தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
28. உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை
நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று
சொல்லாதே.
29. அச்சமின்றி உன்னிடத்தில் வாசம்பண்ணுகிற உன்
அயலானுக்கு விரோதமாக தீங்கு நினையாதே.
30. ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி
அவனோடே வழக்காடாதே.
31. கொடுமையுள்ளவன்மேல் பொறாமை
கொள்ளாதே; அவனுடைய வழிகளிலொன்றையும்
தெரிந்துகொள்ளாதே.
32. மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்;
நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
33. துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம் இருக்கிறது,
நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
34. இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ
கிருபையளிக்கிறார்.
35. ஞானவான்கள் கனத்தைச் சுதந்தரிப்பார்கள்; மதிகேடரோ
கனவீனத்தை அடைவார்கள்.
*
1. பிள்ளைகளே, நீங்கள் தகப்பன் போதகத்தைக் கேட்டு, புத்தியை அடையும்படி
கவனியுங்கள்.
2. நான் உங்களுக்கு நற்போதகத்தைத் தருகிறேன்; என் உபதேசத்தை
விடாதிருங்கள்.
3. நான் என் தகப்பனுக்குப் பிரியமான குமாரனும், என்
தாய்க்கு மிகவும் அருமையான ஒரே பிள்ளையுமானவன்.
4. அவர் எனக்குப் போதித்துச் சொன்னது: உன் இருதயம்
என் வார்த்தைகளைக் காத்துக்கொள்ளக்கடவது; என்
கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
5. ஞானத்தைச் சம்பாதி, புத்தியையும் சம்பாதி; என் வாயின்
வார்த்தைகளை மறவாமலும் விட்டு விலகாமலும் இரு.
6. அதை விடாதே, அது உன்னைத் தற்காக்கும்: அதின்மேல்
பிரியமாயிரு, அது உன்னைக் காத்துக்கொள்ளும்.
7. ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச்
சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள்.
8. நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத்
தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும்.
9. அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக்
கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.
10. என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்;
அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.
11. ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்;
செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
12. நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண்
உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
13. புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை
விட்டுவிடாதே; அதைக்காத்துக்கொள், அதுவே உனக்கு
ஜீவன்.
14. துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில்
நடவாதே.
15. அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு
விலகிக் கடந்துபோ.
16. பொல்லாப்புச் செய்தாலொழிய
அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும்
விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
17. அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து,
கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
18. நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப்
பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.
19. துன்மார்க்கருடைய பாதையோ காரிருளைப்போலிருக்கும்; தாங்கள்
இடறுவது இன்னதில் என்று அறியார்கள்.
20. என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு
உன் செவியைச் சாய்.
21. அவைகள் உன் கண்களை விட்டுப்பிரியாதிருப்பதாக; அவைகளை
உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள்.
22. அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும்,
அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
23. எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக்
காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.
24. வாயின் தாறுமாறுகளை உன்னை விட்டகற்றி, உதடுகளின்
மாறுபாட்டை உனக்குத் தூரப்படுத்து.
25. உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது; உன் கண்ணிமைகள்
உனக்கு முன்னே செவ்வையாய்ப் பார்க்கக்கடவது.
26. உன் கால் நடையைச் சீர்தூக்கிப்பார்; உன்
வழிகளெல்லாம் நிலைவரப்பட்டிருப்பதாக.
27. வலதுபுறமாவது இடதுபுறமாவது சாயாதே; உன் காலைத்
தீமைக்கு விலக்குவாயாக.
*
1. என் மகனே, என் ஞானத்தைக் கவனித்து, என் புத்திக்கு உன்
செவியைச் சாய்;
2. அப்பொழுது நீ விவேகத்தைப்பேணிக்கொள்வாய்,
உன் உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.
3. பரஸ்திரீயின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவள் வாய்
எண்ணெயிலும் மிருதுவாயிருக்கும்.
4. அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும்
கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.
5. அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள்
பாதாளத்தைப் பற்றிப்போகும்.
6. நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக்கொள்ளாதபடிக்கு,
அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை
அறியமுடியாது.
7. ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச்
செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு
நீங்காதிருங்கள்.
8. உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின்
வாசலைக்கிட்டிச் சேராதே.
9. சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின்
காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
10. அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்;
உன் பிரயாசத்தின்பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
11. முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ
துக்கித்து:
12. ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே,
கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!
13. என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு
உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும்
போனேனே!
14. சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும் கொஞ்சங்குறைய
எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
15. உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற
ஜலத்தையும் பானம்பண்ணு.
16. உன் ஊற்றுகள் வெளியிலும் உன் வாய்க்கால்கள்
வீதிகளிலும் பாய்வதாக.
17. அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாயிராமல், உனக்கே
உரியவைகளாயிருப்பதாக.
18. உன் ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்
இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.
19. அவளே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான
வரையாடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே
எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக;
அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும்
மயங்கியிருப்பாயாக.
20. என் மகனே, நீ பரஸ்திரீயின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய
ஸ்திரீயின் மார்பைத் தழுவவேண்டியதென்ன?
21. மனுஷனுடைய வழிகள் கர்த்தரின் கண்களுக்கு முன்பாக
இருக்கிறது; அவனுடைய வழிகளெல்லாவற்றையும் அவர்
சீர்தூக்கிப்பார்க்கிறார்.
22. துன்மார்க்கனை அவனுடைய அக்கிரமங்களே
பிடித்துக்கொள்ளும்; தன் பாவக்கயிறுகளால்
கட்டப்படுவான்.
23. அவன் புத்தியைக் கேளாததினால் மடிந்து, தன் மதிகேட்டின்
மிகுதியினால் மயங்கிப்போவான்.
*